சீரியல் நடிகை வாஹினி காலமானார் – தமிழ், தெலுங்கு திரையுலகங்களை சோகத்தில் ஆழ்த்திய மரணம்
சென்னை: (TV Actress Vahini (Padma) Passes Away) தெலுங்கு மற்றும் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பரிச்சயமான முகமாக இருந்த மூத்த நடிகை வாஹினி (பத்மா) காலமானார். கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி தனது சொந்த ஊரான விஜயநகரத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு, திரையுலகத்தையும், தொலைக்காட்சி தொடர் ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக நாம் சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடிப்பவர்களை பார்க்கும்போது இவர்கள் நிஜத்திலும் இப்படித்தான் வசதியாக இருப்பார்கள் என்று நினைத்துக் கொள்வோம். ஆனால் அப்படி எல்லாம் இல்லை அவர்கள் சம்பளத்திற்காகத்தான் அங்கு வேலை பார்க்கிறார்கள், நடிப்புக்கு பிறகு அவர்களுடைய வாழ்க்கையே வேறு என்று சிலருடைய கதை தெரியும்போது தான் மனதிற்குள் ஒரு நெருடலை ஏற்படுத்துகிறது. அதேபோலத்தான் பல சீரியல்களில் பணக்கார கேரக்டரில் நடித்த வாஹினி கடைசி காலகட்டத்தில் மிகுந்த கஷ்டப்பட்டு காலமாகி இருக்கிறார்.

நடிகை வாஹினியின் மறைவுச் செய்தியை அவரது நெருங்கிய தோழியும் நடிகையுமான கராத்தே கல்யாணி சமூக வலைதளங்களில் உறுதி செய்தார். "வாஹினியை காப்பாற்ற கடைசி வரை முயன்றோம். மருத்துவர்கள் நிலைமை மோசமாக உள்ளது என கூறிய பின், அவரை ஊருக்கு அழைத்துச் சென்றோம். இப்போது அவர் இறைவனின் அடியில் அமைதியடைந்துள்ளார்" என கல்யாணி பதிவிட்டிருந்தார். இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் உணர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
புற்றுநோயுடன் நீண்ட போராட்டம்
வாஹினி கடந்த சில ஆண்டுகளாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மட்டுமின்றி, பொருளாதார சிக்கல்களையும் அவர் எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. அவரது சிகிச்சைக்காக நண்பர்கள், கலைத் துறையை சேர்ந்தவர்கள் உதவி செய்த போதும், நோயின் தீவிரம் காரணமாக அவரை காப்பாற்ற முடியவில்லை. நடிகை கராத்தே கல்யாணி தனிப்பட்ட முறையில் நிதி திரட்டி, மருத்துவ உதவிகளை ஏற்பாடு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
சின்னத்திரையில் தனி இடம் பிடித்த நடிகை
வாஹினி முதலில் சிறிய வேடங்களில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் வில்லத்தனமான, மற்றும் ஸ்ட்ராங்கான பெண்கதாபாத்திரங்களில் அவரது நடிப்பு கவனம் பெற்றது. தெலுங்கு சினிமாவில் மட்டுமின்றி, தமிழ் சின்னத்திரையிலும் அவர் நடித்த தொடர்கள் மூலம் குடும்ப ரசிகர்களிடம் பரிச்சயமான முகமாக மாறினார்.
சீரியல்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள், பார்வையாளர்களிடையே "நெகட்டிவ் ரோல்" என்றாலும், அவரது இயல்பான நடிப்பால் மனதில் பதிந்ததாக ரசிகர்கள் நினைவுகூர்கிறார்கள். குறிப்பாக சில சீரியல்களில் மாமியாராகவும் ஒரு சில சீரியல்களில் ஒரு குடும்பத்திற்குள் இருந்து கழகத்தை ஏற்படுத்தும் கேரக்டரிலும் நடித்திருக்கிறார் தமிழில் கூட ஒரு சில சீரியல்களில் இவர் ஆரம்ப காலகட்டத்தில் நடித்திருக்கிறார்.
திரையுலகத்தின் இரங்கல்
வாஹினியின் மறைவு செய்தி வெளியானதும், பல நடிகர்கள், இயக்குநர்கள், சீரியல் துறையை சேர்ந்த கலைஞர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். "குணச்சித்திர வேடங்களில் தனி முத்திரை பதித்தவர்", "எதிர்மறை பாத்திரங்களை கூட மனதில் பதிய வைத்தவர்" என்ற வார்த்தைகளில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
ஒரு கலைஞனின் வாழ்க்கை
வாஹினியின் வாழ்க்கை, பல கலைஞர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை நினைவூட்டுகிறது. புகழ் இருந்தாலும், உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் பொருளாதார சிக்கல்கள் அவரை கடுமையாக பாதித்தன. இருந்தாலும், கடைசி வரை தன்னம்பிக்கையுடன் போராடிய அவரது மனநிலை பலருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கு சின்னத்திரை ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த நடிகை வாஹினியின் மறைவு, தொலைக்காட்சி தொடர் உலகில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அவர் நடித்த கதாபாத்திரங்கள், அவரது குரல், நடிப்பு மற்றும் திரையில் அவர் வெளிப்படுத்திய உணர்ச்சிகள் நீண்ட காலம் ரசிகர்களின் நினைவில் நிலைத்து இருக்கும். அவரது குடும்பத்தினருக்கும், நெருங்கியவர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications