உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்டா அத்தான்... ஜிவ்வுன்னு இருக்கு.. உருகிய தாமரை
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ஆர்.ஜெ.செந்தில் ரெட்டை வேஷத்துல நடிச்சுகிட்டு இருக்கார். இவர் அப்பா அம்மா வேறு, வளர்த்தவங்க வேறு.
ஆனா, பெத்த அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, டாக்டர் பிள்ளை அரவிந்த், அவங்க வீட்டோட வளர்ப்பு அம்மா, அப்பாவோட அந்த வீட்டுல கொஞ்ச நாள் தங்க வர்றார். மனைவி தாமரையும் கூட வர்றா.
அரவிந்தின் ரெண்டு அப்பா அம்மாவும் அண்ணன் தம்பிங்க முறைதான் ஆகுது. டாக்ருக்கு படிச்ச செந்தில், மும்பையிலிருந்து கிராமத்துக்கே வந்துடறான். இவன் மனைவி தாமரை படிக்காத பொண்ணு.இன்னும் இருவரும் சேர்ந்து வாழலை.
முத்துசெல்வியைத்தான் இந்த சின்னவரு கட்டிக்கணுங்க.. ஆமாங்க சொல்லிப் போட்டோமுங்க!
துப்பட்டா
தலை வலிக்குதுன்னு துப்பட்டாவை தலையில் கட்டிக்கிட்டு டாக்டரின் பொண்டாட்டி தாமரை வர, என்னது தாமரை தலையில துப்பட்டாவை கட்டிக்கிட்டு வர்றேன்னு புருஷன் கேட்கறான். தலைவலி தாங்க முடியலை..அதான் இதை கட்டிகிட்டேன்னு சொல்றா
தாமரை
சரிதான்.. நீங்களே வைத்தியம் பார்த்துக்கறீங்க.. என்கிட்டே மாத்திரை கேட்டா நான் தர மாட்டேனான்னு கேட்கறான். இல்லைங்க உங்க கிட்ட கேட்கத்தான் வந்தேன். அதுவரைக்கும் இதை கட்டிக்கலாமேன்னுதான்னு தாமரை சொல்றா.
மாத்தி
சரி, அப்பாவுக்கு மாத்திரை டப்பா வச்சிருக்கேன்ல. அதுக்கு பக்கத்துல ஒரு டப்பாவுல மாத்திரை இருக்கும் அதை போட்டுக்கோன்னு சொல்றான் அரவிந்த். மாமனாருக்கு தூக்கத்துக்கு தரும் மாத்திரையை தவறுதலா எடுத்து போட்டுக்கறா தாமரை.
தாமரை
இதை தெரிஞ்சுக்கிட்ட அரவிந்த் வீட்டுல இருக்கறவங்க கிட்ட, தாமரை அப்பாவுக்கு போடற மாத்திரையை எடுத்து போட்டுக்கிட்டா. அது ஒரு மாதிரி போதையா இருக்கும். ஆண்களுக்கே இது ஒரு மாதிரி இருக்கும். பொண்ணுங்க சாப்பிட்டா இன்னும் போதை அதிகமா இருக்கும். நான் ஆஸ்பிடல் போயிட்டு வரதுக்குள்ள அவளை பார்த்துக்கோங்க.. உடனே வந்திருவேன்னு சொல்லிட்டு போறான்.
மான் கராத்தே
ரூமை விட்டு வெளியில வந்த தாமரை மான் கராத்தே சிவகார்த்திகேயன் மாதிரி நிக்கறா. எல்லாரும்வீட்டு முற்றத்தில் நின்னு அவளை வேடிக்கை பார்க்கறாங்க. அப்புறம் அவங்களை நோக்கி வந்த தாமரை, மை டியர் அங்கிள் என்ன பண்றீங்கன்னு கேட்கறா..
இன்னிய பேப்பர்
பேப்பர் படிச்சுக்கிட்டு இருக்கேன்மான்னு சொல்ல, வாங்கிப் பார்த்துட்டு ரெண்டு நாளைக்கு முன்னால பேப்பரையே இப்போதான் படிக்கறீங்க..அப்புறம் எப்போ நேத்து பேப்பர், இன்னிய பேப்பர் படிக்கப் போறேன்னு கேட்கறா. என்னம்மா மரியாதை எல்லாம் தேயுது.. இன்னிக்கு படிச்சுடறேன்னு சொல்றார்.
குஸ்தி அங்கிள்
இன்னொரு மாமனார் குஸ்தி வாத்தியாரை குஸ்தி அங்கிள்.. கை எல்லாம் பரப்பரங்குது.. ஒரு குஸ்தி போடலாமான்னு கேட்கறா. இப்படி எல்லாரிடமும் வம்பிழுத்த தாமரை, கடைசியில் சொடக்கு மேல சொடக்கு போடுது பாடலுக்கு வீடே அதிர டான்ஸ் ஆடி, எல்லாரையும் ஆட வைக்கறா.
திடும்னு எழுந்திரிச்சு
மயங்கி முற்றத்தில் விழுந்துட்ட பொண்டாட்டியை தூக்கிட்டு பெட்ரூமுக்கு வர்றான் அரவிந்த். ஒரு மணி நேரம் வீட்டுல இல்லை.. எல்லாரையும் இந்த பாடு படுத்திட்டியேன்னு படுக்க வைக்க திடும்னு எழுந்திரிச்சு உட்கார்ந்துக்கறா.
ரொம்ப பிடிக்கும் டா
தாமரை.. நீ மாத்திரை சாப்பிட்டு இருக்கே.. தூங்குன்னு சொல்ல... தூக்கம் வராது அத்தான்.. நான் ஒன்னு சொல்லட்டுமான்னு கேட்கறா. சொல்லுன்னு அவன் சொல்ல.. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் டா... நீ என்னைத் தாமரைன்னு கூப்பிடுவே பாரு.. அது அப்படியே ஜிவ்வுன்னு இருக்கும்னு அவ சொல்ல இவன் சிரிக்கறான்.
.ஐ.லவ் யூ டா
இதாண்டா.. உன் சிரிப்புதாண்டா.. உலகத்துல யார் சிரிச்சாலும் இப்படி இருக்காதுடா..ஐ.லவ் யூ டான்னு சொல்றா.. அவன் மேல சாஞ்சுகிட்டு..சத்தமா பேசாத.. மரியாதை இல்லாம பேசறதை யாராவது கேட்டுட போறாங்கன்னு சொல்றான்.
மரியாதை
மாமோய்.. உனக்கு மரியாதை வேணுமா, தாமரை வேணுமான்னு கேட்கறா.. அவன் சிரிக்க ஐயோ.. இந்த சிரிப்புதாண்டான்னு அவ மறுபடியும் சொல்ல, சரி சிரிக்கலைன்னு சொல்றான். ஐயோ.. ஐயோ.. நீ சிரிக்காம இருந்தே.. நான் செத்துருவேன்.
தூங்கிடறா தாமரை
உன்னை எனக்கு அவ்ளோ புடிக்கும்..என்னை செத்து போன்னு வேணா சொல்லு, விட்டுட்டு போண்ணு மட்டும் சொல்லிட்டாத அத்தான்னு சொல்லிகிட்டே மார்பில் தூங்கிடறா தாமரை.
மாத்திரை போதையோடு காதல் போதையும் சேர்ந்த தாமரையை பக்குவமாக படுக்க வைக்கறான் அரவிந்த்.