Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை சீரியலின் சாதனை.. ஸ்பெஷல் வாழ்த்து சொன்ன விஜய் டிவி.. அப்போ இனி கதை மாற்றமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று 500 ஆவது எபிசோடு ஒளிபரப்பாகிறது. இதற்கு விஜய் டிவி தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் இதுவரைக்கும் இந்த சீரியலில் ரோகிணி மாட்டாமல் இருந்த நிலையில் இனி அவர் மாட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் டிஆர்பியில் முதல் இடத்தை சிறகடிக்க ஆசை சீரியல் தான் பிடித்து வருகிறது. இந்த சீரியல் சன் டிவி சீரியல்களுக்கும் டப் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் வெற்றிகரமாக 500 எபிசோடு முடிவடைந்துவிட்டது. இதற்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

siragadikka aasai serial vijay tv

இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களும் தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள். அதே நேரத்தில் விஜய் டிவியின் அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இந்த சீரியலுக்கு வாழ்த்துக்களும் போஸ்ட் போட்டு இருக்கிறார்கள். ஆனாலும் இதுவரைக்கும் இந்த சீரியலில் ரோகிணி ஒரு இடத்தில் கூட மாட்டாமல் தப்பித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை ரகசியமாக வைத்துக் கொண்டிருக்கும் ரோகிணி எப்போதும் மாட்டுவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது.

அதுபோல ‌ ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியலில் கதாநாயகனான முத்து மற்றும் மீனாவிற்கு தான் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. மனோஜ் என்னதான் வில்லத்தனம் செய்து கொண்டிருந்தாலும் அவர் செய்யும் திருட்டுத்தனம் உடனே வீட்டிற்கு தெரிய வருகிறது. ஆனால் ரோகிணி ஒவ்வொரு இடத்திலும் தப்பிப்பதை ரசிகர்கள் விரும்பவில்லை. இப்போது கூட கதையின்படி மனோஜை ரோகிணியின் பழைய பிஏ தினேஷ் மிரட்டிக்கொண்டிருக்கும் விஷயம் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

siragadikka aasai serial vijay tv

இந்த விஷயத்தில் ரோகிணி மீது முத்துவிற்கும் சந்தேகம் இருக்கிறது. அதே நேரத்தில் மனோஜை யார் மிரட்டுவது என்ற உண்மையை நான் கண்டுபிடித்து இருக்கிறேன் என்று அடுத்த வாரத்திற்கான ப்ரோமோவில் முத்து சொல்லி இருக்கிறார். இதனால் இனி கதை மாறப்போகிறதா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ரோகிணியின் வாயால் உண்மையை தெரிய வேண்டும் என்பதற்காக முத்து நான் மனோஜை மிரட்டுறவனை கண்டுபிடித்து விட்டேன் என்று சொல்கிறாரா? அல்லது உண்மையில் கண்டுபிடித்து இருக்கிறாரா? என்பது அடுத்த வாரம் தான் தெரிய வரும்.

siragadikka aasai serial vijay tv

அதே நேரத்தில் தினேஷை முத்து கண்டுபிடித்து விட்டால் அவர் ரோகிணி பற்றிய பழைய கதைகளை சொல்லப் போகிறாரா? அல்லது அதற்கு முன்பு முத்து ஃபோனில் இருக்கும் சத்யா வீடியோவை ரோகிணி சோசியல் மீடியாவில் போடப்போகிறாரா? என்று எதிர்பார்ப்புகளும் இருக்கிறது. அதனால் அடுத்த வாரத்தில் பரபரப்பாக காட்சிகள் செல்லும்.

siragadikka aasai serial vijay tv

இந்த பஞ்சாயத்துக்கு இடையே இன்றைய எபிசோடில் முத்து தன்னுடைய பிளாஷ்பேக் கதையை மீண்டும் பட்டும் படாமல் பேசுகிறார். அதனால் அந்த கதை எப்போதுதான் வெளியே வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்போடு நொந்து கொள்கிறார்கள். எப்படியோ சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் வந்து கொண்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+