Thenmozhi BA Serial: பொண்ணுங்களே.. தெரிஞ்சுக்கோங்க.. இதுதான் தற்காப்பு ஆயுதம்!
சென்னை: பெண்கள் தங்களை ஆபத்திலிருந்து தற்காத்து கொள்ள சமயோசித புத்தியுடன் செயல்பட்டால் கண்களில் படும் எல்லாமே சரியான ஆயுதம் என்பதை உணர்த்துவதாக தேன்மொழி செயல் இருக்கிறது.
விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில், தன்னை எதிர்த்து போட்டியிடும் கன்னியம்மாவின் புருஷனை கொலை செய்ய வரும் ஆட்களை அவர்கள் கண்ணில் மண்ணை தூவி முதல் கட்டமாக தற்காப்பு வேலை செய்கிறாள் தேனு.
அடுத்து ஆக்ஷன்தான்.. அவளும் ஹீரோதான்.. வரும் கால ஊராட்சி மன்றத் தலைவர் வேற..சண்டை போட மாட்டாளா என்ன?
மறைமுகமாக காந்திநகர்
இந்த முறை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு காந்திநகர் பெண்களுக்குத்தான் வாய்ப்பு என்று அரசாங்கம் அறிவித்து விடுகிறது. உங்களுக்கே புரியும்..காந்தி நகர் என்று மறைமுகமாக இந்த சீரியலிலும் ஒரு முக்கிய குறைபாட்டைத்தான் கதையின் முக்கிய அம்சமாக வைத்து இருக்கிறார்கள்.
Ayudha Ezhuthu Serial: இந்த சீரியலில்தான் சரண்யா தாய்வீடுன்னு நடிக்க வந்துட்டாங்க!
காப்பாற்றிய தேன்மொழி
தேர்தலில் தன்னை எதிர்த்து தேவர் ஐயா நிற்க வைத்து இருக்கும் கன்னியம்மாவின் புருஷனை கொன்னுட்டு,பழியை தேனு மீது போட்டுவிட்டால் கன்னி அம்மாள் ஜெயிச்சுருவானு தப்புக் கணக்கு போடுகிறார் தேவர் ஐயா. கோயிலில் கூட்டத்தில் கலவரத்தை உண்டாக்கி, கன்னியம்மாவின் புருஷனை கொலை செய்ய முயற்சி செய்வதை ரவுடிகளின் கண்களில் முதலில் மண்ணைத் தூவி அட்டாக் செய்கிறாள் தேனு.
ஆக்ஷன் தூள்
அடுத்து ஆக்ஷன் காட்சிகள் என்று தூள் பறக்குது. கன்னியம்மாவின் புருஷனை காப்பாத்தினாலும், அப்போது வந்தவனில் ஒருவன் பொம்பளை புள்ளை வீட்டோட இருந்தோமா கல்யாணம் செய்துகிட்டோமான்னு இல்லாம உனக்கு அரசியல் கேட்குதான்னு ஒரு கேள்வி எழுப்ப, அவளுக்குள் அது பெரும் காயமாக இறங்குகிறது.
எனக்கு வேணாம்
அரசியலுக்காக ஜனங்க மத்தியில் கலவரத்தை உண்டாக்குவீங்களா? எங்க ரத்தத்தில் உங்களுக்கு அடிமையா இருந்தே காலம் கழிக்கணும்னு எழுதியா இருக்குது. அரசாங்கமே பார்த்து ஒதுக்கின தொகுதிதானே இது. இதுக்காக கொலை எல்லாம் செய்வீங்களா? அப்போ மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வரேன்னு சொல்றது பொய்யா? இப்படிப்பட்ட அரசியல் எனக்கு வேணாம் எல்லாரும் கன்னியம்மாவுக்கே ஓட்டு போடுங்கன்னு சொல்லிட்டு அழுதுகிட்டே போறா தேனு.