கர்ப்பிணியை பாடுபடுத்தினா இப்படித்தான்.. வலியால் "துடித்த" சைத்ரா ரெட்டி.. கடவுள் இருக்கான் குமாரு!
சென்னை: கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி வலியால் துடிக்கும் காட்சி அடங்கிய வீடியோ வெளியாகி ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.
கன்னட நடிகை சைத்ரா ரெட்டி. இவர் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து இவர் சன் டிவியில் கயல் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்துவிட்டார்.
இவர் வலிமை படத்திலும் அஜித்துடன் நடித்துள்ளார். கயல் சீரியல் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. அதில் யாரோ ஒருவர் கயலின் கணவர் என கூறி கொண்டு வருகிறார். அவர் யார், அவரை யார் அனுப்பியது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் கயல் உளளார்.

இன்ஸ்டாகிராம் வீடியோ: இந்த நிலையில் ஷூட்டிங் இல்லாத நேரங்களில் சில வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி காது மடல் குத்தி தோடு போட்ட வீடியோவை போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு நகைக் கடைக்கு ஏதோ வாங்க சென்றேன். அப்போது எனது நீண்ட கால ஆசையை என் அம்மா நினைவுப்படுத்தினார்.
தோடு: காது மடலில் 3வதாக ஒரு தோடு போட வேண்டும் என்பது எனது ஆசை. இதற்காக அந்த நகைக் கடையில் இருந்த ஆச்சாரியிடம் கேட்டு காது மடலில் குத்திக் கொண்டேன். இந்த நிகழ்வு வெறும் 2 நிமிடங்களில் நடந்து முடிந்தது. ஆரம்பத்தில் வலிக்குமோ என பயந்தேன். ஆனால் வலியே இல்லை, சிறியதாக ஒரு ஜெர்க் இருந்தது.

வேடிக்கை: இந்த காது குத்தும் படலம் வேடிக்கையாக இருந்தது. எனக்கு நினைவுப்படுத்தியதற்கு அம்மாவுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். ராஜ ராஜ சோழன் நான் என்ற பாடல் பேக்கிரவுண்டில் இசைக்க சைத்ராவுக்கு காது குத்தும் போது லேசாக வலி இருந்தது போல! அதற்காக முகத்தை சுருக்குகிறார். பின்னர் சிரிக்கிறார். இதற்கு நடிகை நட்சத்திரா, கேபி உள்ளிட்டோர் நன்றாக இருப்பதாக கூறியுள்ளனர்.
கர்ப்பிணி நட்சத்திரா: இதையடுத்து எங்கே காது குத்தினீங்க என ரசிகர்கள் அவரிடம் கேட்டு வருகிறார்கள். சிலர் அதென்ன வைரமா இல்லை தங்கமா என கேட்டுள்ளனர். நிறைய ரசிகர்கள் அழகாக இருக்கிறது அக்கா என பதிவிட்டுள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு நிறைமாதமாக இருக்கும் நட்சத்திராவை கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி விளையாட்டாக படாதபாடுபடுத்தினார். அதற்கெல்லாம் கடவுள் சேர்த்து வச்சி செய்துட்டாரோ! நட்சத்திராவும் சைத்ராவும் தோழிகள். இருவரும் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்த போது தோழிகளாகிவிட்டனர். அவரது வளைகாப்பு நிகழ்ச்சியில் சைத்ரா கலந்து கொண்டு வாழ்த்தினார்.












Click it and Unblock the Notifications