இளையராஜா எனக்கு கடவுளுக்கு மேலே.. சிலிர்த்த பிரபலம்.. “வா தமிழா”வில் ஆரி கேட்ட கேள்வி
சென்னை: கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வா தமிழா வா நிகழ்ச்சியை முதல் முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த ஆரி தொகுத்து வழங்கியிருக்கிறார். அவர் தொகுத்து வழங்கும் முதல் எபிசோடில், "இளையராஜா பாடல்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு "குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கிறது.
அதில் ஒரு ரசிகர் எனக்கு இளையராஜா கடவுளுக்கு மேலே என்னுடைய கவலைகளை தீர்க்க பல பாடல்களை தந்திருக்கிறார் என்று பேசி இருக்கிறார். அதற்கு ஆரி சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் பிரபலத்தை பார்த்து அதற்கு போட்டியாக பல சேனல்களில் பல பெயர்களில் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு வருகிறது. ஜீ தமிழில் தமிழா தமிழா நிகழ்ச்சி தொடங்கப்பட்டு அது மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று இருக்கிறது. அதைத்தொடர்ந்து வா தமிழா வா என்ற நிகழ்ச்சி கலைஞர் டிவியில் தொடங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இயக்குனர், நடிகர் என்று பல முகங்களை கொண்ட கரு பழனியப்பன் தொகுத்து வழங்கி வந்தார். கரு பழனியப்பன் ஜீ தமிழில் தமிழா தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் அதிலிருந்து விலகி கலைஞர் டிவியில் வா தமிழா வா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்தநிலையில் கடந்த வாரத்தோடு அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகிவிட்டார்.
அதற்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த ஆரி தொகுப்பாளராக மாறி இருக்கிறார். ஆரி தொகுத்து வழங்கும் முதல் நிகழ்ச்சி "வா தமிழா வா" என்ற நிகழ்ச்சியாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடில் இளையராஜா பாடலின் பெருமை அவருடைய ரசிகர்களிடம் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. அதில் இளையராஜா குறித்து பலரும் பல்வேறு தகவல்களை கூறிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஆரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தவர்களிடம் நீங்கள் இளையராஜாவை யாரோடு ஒப்பிடுவீர்கள்? உங்களுடைய பிளே லிஸ்டில் அவருடைய பாடல்களுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்ட கேள்விக்கு பலர் பல்வேறு பதில்களை கூறிக் கொண்டிருந்தனர். அதில் ஒரு பிரபலம் "எனக்கு இளையராஜா கடவுளுக்கு மேலே.." கடவுள் நம்முடைய கவலைகளை தீர்ப்பவர் என்றால் இளையராஜா எனக்கு அதற்கு மேலே தான்.
எனக்கு எந்த நேரத்தில் எல்லாம் கவலை இருக்கிறதோ அப்போது அவருடைய பாடல்களை கேட்டாலே போதும் கவலை எல்லாம் தீர்ந்துவிடும் என்று சொல்லி இருக்கிறார். அதுபோல இன்னொரு ரசிகர் நான் மீன்பிடிக்கும் தொழிலை செய்து வருகிறேன். 7 வயதிலிருந்து இந்த தொழிலில் இருக்கிறேன். எனக்கு நண்பனாகவும் மோட்டிவேஷனலாகவும் இருப்பது இளையராஜாவின் பாடல்கள் தான். நான் தனிமையில் பல நேரங்களில் இருந்திருக்கிறேன்.
அந்த நேரத்தில் எனக்கு துணையாக இருந்தது இளையராஜாவின் பாடல்கள் தான். அவருடைய பாடல்கள் இல்லை என்றால் நான் என்ன ஆகி இருப்பேன் என்று தெரியாது. அவருடைய சோகப் பாடல்கள் கூட எனக்கு பல நேரங்களில் உத்வேகம் கொடுக்கும் பாடலாக மாறி இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதுபோல அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு பெண் நான் என்னுடைய மகன் வயிற்றில் இருக்கும் போதிலிருந்து இளையராஜா பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
அதனாலேயே என்னுடைய மகனும் இளையராஜாவின் தீவிர ரசிகராகிவிட்டார் என்று கூறியிருக்கிறார். அதுபோல அந்த நிகழ்ச்சியில் அந்த பெண்ணின் மகனும் கலந்து கொண்டு இளையராஜாவின் "நலம் வாழ என்நாளும் வாழ்த்துக்கள்" என்ற பாடலை பாடி அங்கிருந்தவர்களை வியக்க வைத்திருந்தார். இப்படியாக ஆரியின் முதல் நாள் எபிசோடில் இளையராஜாவின் பெருமை மற்றும் அவருடைய பாடல்கள் மக்களுக்கு எந்த அளவிற்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது என்பது பற்றி பலர் பேசியிருக்கிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
சிறகடிக்க ஆசை: முத்து கண்டுபிடித்த உண்மை, சிக்கும் விஜயா! மீனாவுக்கு இனி தான் கம்பேக்.. செம சம்பவம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications