சன் டிவி வானத்தைப்போல சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம்! மாப்பிள்ளை இந்த பிரபலம் தானா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தைப்போல சீரியலில் ஆரம்பத்தில் துளசி கேரக்டரில் நடித்து வந்த ஸ்வேதாவிற்கு திருமணம் முடிவடைந்து விட்டது என்று அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படங்கள் பகிர்ந்திருக்கும் நிலையில் அதற்கு பல பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் சன் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் வானத்தைப்போல சீரியல். அண்ணன் தங்கை கதையை மையமாகக் கொண்ட இந்த சீரியலில் பல நடிகர் நடிகைகள் மாறிவிட்டனர். இவருக்கு பதில் இவர் என்பது சீரியலில் புதியது ஒன்றும் கிடையாது. பல வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் சீரியலில் சில நேரங்களில் கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் விலகுகின்றனர்.

பல நேரங்களில் மற்ற சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த சீரியலில் நடிக்க முடியாமல் போகும்போது சீரியலில் இருந்து விலகுபவர்களும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் வானத்தைப்போல சீரியல் ஆரம்பத்தில் துளசி கேரக்டரில் நடித்து பிறகு அந்த சீரியலில் இருந்து விலகியவர் தான் நடிகை ஸ்வேதா.
துளசி கேரக்டரில் நடித்து வந்த ஸ்வேதா சீரியலில் இருந்து விலகி வந்த நேரத்தில் அவருக்கு அண்ணனாக நடித்துக் கொண்டிருந்த நடிகரும் திடீரென்று விலகி இருந்தால் இது அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் இப்போது ஸ்வேதா கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணெதிரே தோன்றினால் என்று சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதுபோல சன் டிவியில் சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் அதிக அளவில் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் ஸ்வேதாவிற்கு சின்ன திரையில் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதோடு இணையத்திலும் இவர் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். அதனாலேயே இளைஞர்களும் இவருக்கு இணையத்தில் பாலோவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
அடிக்கடி வீடியோஸ் மற்றும் புகைப்படங்களை போஸ்ட் போட்டு பலருடைய லைக்குகளை அள்ளிக் கொண்டிருக்கும் ஸ்வேதா இன்று தன்னுடைய ஸ்டோரியில் பகிர்ந்து இருந்த புகைப்படம் தான் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. அதாவது அவருக்கு திருமணம் நடந்து இருக்கிறது என்றும் அவருடைய கணவரின் பெயர் விராந்த் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் தான் எங்கேஜ்மென்ட் முடிவடைந்து இருந்த நிலையில் தற்போது இவர்களுக்கு திருமணம் முடிவடைந்து இருக்கிறது. அந்த புகைப்படத்தை ஸ்வேதா மற்றும் அவருடைய நண்பர்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications