ஆடு பகை குட்டி உறவு.. போட்டி போட்டு போஸ்ட் போட்ட வனிதாவின் சகோதரிகள்.. நெகிழ்ந்து போன விஜய் ஸ்ரீஹரி
சென்னை: நடிகை வனிதாவின் மகனான விஜய் ஸ்ரீஹரி மாம்போ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இதற்கு வாழ்த்து தெரிவித்து வனிதாவின் சகோதரிகள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் போஸ்ட் போட்டு இருக்கின்றனர். அதை பகிர்ந்த விஜய் ஸ்ரீஹரி நெகிழ்ந்து நன்றி தெரிவித்திருக்கிறார்.
பழம்பெரும் நடிகரான விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். அதில் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவின் மூத்த மகளான நடிகை வனிதா அவருடைய குடும்பத்தோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். ஆனாலும் வனிதா 2000 ஆண்டில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்திருந்தார். அவருக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற ஒரு மகனும் இருக்கிறார்.

ஆனால் ஆகாஷோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வனிதா அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். விஜய் ஸ்ரீஹரி தன்னுடைய தந்தையோடு தன்னுடைய தாத்தா விஜயகுமாரின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் விஜய் ஸ்ரீஹரி பிரபு சாலமன் இயக்கும் "மாம்போ" என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இயற்கை அழகோடு வாழ்வியலை படம் பிடித்து காட்டும் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தின் போஸ்ட் வெளியானதை தொடர்ந்து விஜய் ஸ்ரீஹரிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த போஸ்டரை பகிர்ந்த நடிகை வனிதா தன்னுடைய மூத்த மகன் சினிமாவில் அறிமுகமாவது தனக்கு மிகவும் சந்தோஷம் என்றும் ,தான் கடவுளிடம் வேண்டியது இப்போது நிறைவேறி இருக்கிறது.. எனக்கு இதை நினைக்கும்போது கண்ணீர் வருகிறது என்று ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து விஜய் ஸ்ரீஹரிக்கு அவருடைய சித்தி மற்றும் பெரியமாக்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். நடிகை வனிதாவின் உடன் பிறந்த சகோதரிகளான நடிகை ஸ்ரீதேவி மற்றும் பிரீத்தா இருவரும் மஞ்சுளா மற்றும் விஜயகுமாருக்கு பிறந்தவர்கள் இவர்கள் விஜய் ஸ்ரீ ஹரியை வாழ்த்தியிருக்கின்றனர். அதுபோல விஜயகுமாரின் மூத்த மனைவியின் மகள்களான அனிதா மற்றும் கவிதாவும் விஜய் ஸ்ரீஹரியை வாழ்த்தி அவர் இன்னும் அதிகமாக சாதிக்க வேண்டும் என்று பதிவு வெளியிட்டு இருக்கின்றனர்.

அந்த பதிவுகளை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த விஜய் ஸ்ரீஹரி எல்லோருடைய அன்பை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நெகிழ்ச்சியோடு நன்றி கூறி இருக்கிறார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications