ஆடு பகை குட்டி உறவு.. போட்டி போட்டு போஸ்ட் போட்ட வனிதாவின் சகோதரிகள்.. நெகிழ்ந்து போன விஜய் ஸ்ரீஹரி
சென்னை: நடிகை வனிதாவின் மகனான விஜய் ஸ்ரீஹரி மாம்போ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இதற்கு வாழ்த்து தெரிவித்து வனிதாவின் சகோதரிகள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் போஸ்ட் போட்டு இருக்கின்றனர். அதை பகிர்ந்த விஜய் ஸ்ரீஹரி நெகிழ்ந்து நன்றி தெரிவித்திருக்கிறார்.
பழம்பெரும் நடிகரான விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். அதில் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவின் மூத்த மகளான நடிகை வனிதா அவருடைய குடும்பத்தோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். ஆனாலும் வனிதா 2000 ஆண்டில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்திருந்தார். அவருக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற ஒரு மகனும் இருக்கிறார்.

ஆனால் ஆகாஷோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வனிதா அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். விஜய் ஸ்ரீஹரி தன்னுடைய தந்தையோடு தன்னுடைய தாத்தா விஜயகுமாரின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் விஜய் ஸ்ரீஹரி பிரபு சாலமன் இயக்கும் "மாம்போ" என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இயற்கை அழகோடு வாழ்வியலை படம் பிடித்து காட்டும் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தின் போஸ்ட் வெளியானதை தொடர்ந்து விஜய் ஸ்ரீஹரிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த போஸ்டரை பகிர்ந்த நடிகை வனிதா தன்னுடைய மூத்த மகன் சினிமாவில் அறிமுகமாவது தனக்கு மிகவும் சந்தோஷம் என்றும் ,தான் கடவுளிடம் வேண்டியது இப்போது நிறைவேறி இருக்கிறது.. எனக்கு இதை நினைக்கும்போது கண்ணீர் வருகிறது என்று ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து விஜய் ஸ்ரீஹரிக்கு அவருடைய சித்தி மற்றும் பெரியமாக்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். நடிகை வனிதாவின் உடன் பிறந்த சகோதரிகளான நடிகை ஸ்ரீதேவி மற்றும் பிரீத்தா இருவரும் மஞ்சுளா மற்றும் விஜயகுமாருக்கு பிறந்தவர்கள் இவர்கள் விஜய் ஸ்ரீ ஹரியை வாழ்த்தியிருக்கின்றனர். அதுபோல விஜயகுமாரின் மூத்த மனைவியின் மகள்களான அனிதா மற்றும் கவிதாவும் விஜய் ஸ்ரீஹரியை வாழ்த்தி அவர் இன்னும் அதிகமாக சாதிக்க வேண்டும் என்று பதிவு வெளியிட்டு இருக்கின்றனர்.

அந்த பதிவுகளை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த விஜய் ஸ்ரீஹரி எல்லோருடைய அன்பை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நெகிழ்ச்சியோடு நன்றி கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications