Goundamani: டைரக்டர் வி. சேகர் மறைவு! தள்ளாடியபடி வந்த கவுண்டமணி! கலங்க வைத்த காட்சி
சென்னை: கோலிவுட்டில் குடும்ப பாங்கான, எதார்த்தமான படங்களை எடுத்து வெற்றி கண்ட இயக்குநர் வி. சேகர் உடல்நலக்குறைவால் நேற்றிரவு (நவ. 14, 2025) காலமானார். அவரது இழப்பு தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. அவரது உடலுக்குப் பல திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், வி. சேகரின் பல படங்களில் நடித்த நடிகர் கவுண்டமணி இந்த வயதிலும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியது, அனைவரின் மனதையும் நெகிழ வைத்திருக்கிறது.

எதார்த்த டைரக்டர் வி. சேகர்
வி. சேகர் இயக்கிய அத்தனைப் படங்களும் கூட்டுக் குடும்பத்தின் வலிமை, அவர்களுக்குள் இருக்கும் சிக்கல்கள் என அனைத்தையும் பேசியது. அதேபோல், மிடில் கிளாஸ் குடும்பம், லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்வியலை அச்சு அசலாகவும், எதார்த்தமாகவும் காட்சிப்படுத்தியவர் இவர்தான். இவர் தனது படங்களில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும், போகிற போக்கில் அசால்டாக ஏகப்பட்ட முற்போக்குக் கருத்துக்களையும் பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல்நலக் குறைவும், மறைவும்
சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த வி. சேகருக்குச் சமீபகாலமாக கடுமையான உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எப்படியாவது மீண்டு வருவார் என்று குடும்பத்தினரும் நம்பியிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்தார். அவரது உடல் தற்போது கோடம்பாக்கத்தில் இருக்கும் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தள்ளாடியபடி வந்த கவுண்டமணி
வி. சேகர் இயக்கத்தில் வடிவேலு, விவேக் ஆகியோர் வரிசையாக நடித்தனர். அவர் சரியான நேரத்தில் அவர்களைப் பயன்படுத்தியதால், அவர்கள் உச்சத்தை நோக்கிச் சென்றனர். வி. சேகருடன் நெருக்கமாகப் பணியாற்றிய நடிகர் கவுண்டமணி, அவரது மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
நெகிழ்ச்சியான காட்சி
வயோதிகம் காரணமாக கருப்பு சட்டை அணிந்தபடி, இரண்டு பேரின் துணையோடு தள்ளாடியபடி வந்த கவுண்டமணி, தனது பழைய நண்பருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார். இந்த வயதிலும் மறக்காமல், தன் நண்பரின் இழப்புக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய அவரது நட்புப் பாசம் பலரையும் நெகிழ செய்துள்ளது. நடிகர் வடிவேலு இன்னும் அஞ்சலி செலுத்த வரவில்லை என்றாலும், விரைவில் அவரும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எவர் கிரீன் காமெடி
கவுண்டமணி என்றாலே நியாபகம் வரும் அந்த இயல்பான நடிப்பு, அதிரடியானக் கிண்டல் வசனங்கள் தான். இப்போது இருக்கும் இளம் தலைமுறையினரும் அவரது மீம்ஸ் மற்றும் காமெடி வசனங்களைத்தான் கொண்டாடுகின்றனர்: அதிலும் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா, மருக்கா மருக்கா சொல்லு, டேய் நீ யாருன்னு எனக்கு தெரியும்.. நான் யாருன்னு உனக்கு தெரியும், ஆல் இன் ஆல் அழகுராஜா கொஞ்சம் பல காமெடிகள் பலராலும் ரசிக்கப்பட்டது. இப்போது சினிமாவில் இருந்து விலகி இருக்கும் கவுண்டமணியின் அந்த இயல்பான நடிப்பு மற்றும் பஞ்ச் வசனங்களை ரசிகர்கள் இன்னமும் மிஸ்செய்கிறார்கள். இன்றுப் பல காமெடி காட்சிகள் கவுண்டமணியின் அசல் நடிப்பைத் தொடுவதில்லை என்பதே உண்மை!
வி. சேகரின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை அவரது பிறந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் வேட்டவலம் கிராமத்தில் நடக்கவிருக்கிறது. அதற்கு முன்பு அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கருப்பு சட்டை அணிந்து கவுண்டமணி வந்திருந்தார். அவரை இரண்டு பேர் கைத்தாங்கலாக கூட்டிக் கொண்டு வந்திருந்தனர். அவர் இயக்குனர் சேகரின் மனைவிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அமைதியாக நின்று கொண்டு இருந்தார். ஆனால் அவருடைய வாய் தன்னிச்சையாக அசைந்து கொண்டு இருந்தது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications