Vijay: விஜய் கொண்டு போன கத்தரிக்கோலுக்கு பின்னாடி இப்படி ஒரு ஜாதகம்? பிரபலம் விளக்கம்
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் சிபிஐ விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் மீண்டும் டெல்லி செல்லும் போது நடந்த ஒரு சம்பவம் தற்போது பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி, பல மணி நேர விசாரணைக்கு உட்பட்டிருந்தார் விஜய். இதன் தொடர்ச்சியாக மார்ச் 15ஆம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு சம்மன் வந்ததால், மார்ச் 14ஆம் தேதி அவர் டெல்லி செல்ல திட்டமிட்டார்.
சென்னையின் நீலாங்கரை இல்லத்திலிருந்து காரில் விமான நிலையம் சென்ற விஜய், தனி விமானத்தில் புறப்பட இருந்தார். ஆனால் அப்போது ஏற்பட்ட ஒரு எதிர்பாராத சிக்கல், இந்த பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

பேக்கில் கத்தரிக்கோல்
விமானத்தில் ஏறுவதற்கு முன் நடந்த பாதுகாப்பு சோதனையில், விஜய் வைத்திருந்த பேக்கில் கத்தரிக்கோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் பாதுகாப்பு விதிகளின் அடிப்படையில் விமானத்தை இயக்க முடியாது என பைலட் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விஜய் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டார்.
பின்னர் பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு தான் அந்த விமானம் டெல்லி புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தணன் விளக்கம்
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், வலைப்பேச்சு அந்தணன் இதற்கான ஒரு வித்தியாசமான காரணத்தை முன்வைத்துள்ளார்.
அவர் கூறுகையில், "சில ஜோதிடர்கள் கையில் ஒரு குறிப்பிட்ட பொருள் வைத்திருந்தால் காரியம் வெற்றி அடையும் என்று சொல்வார்கள். அதுபோல கத்தரிக்கோல் வைத்திருந்தால் சிபிஐ விசாரணையில் பிரச்சனை வராது என்று யாரோ ஒருவர் கூறியிருக்கலாம்" என்று தெரிவித்தார்.
மேலும், "அதற்காகவே விஜய் அதை எடுத்துச் சென்றிருக்கலாம் என்பது என் எண்ணம்" என்றும் அவர் கூறியுள்ளார்.
சரக்கு பாட்டிலும் சர்ச்சை
இந்த விவகாரத்தில் இன்னொரு விஷயமும் பேசப்பட்டது. விஜய் உடன் சென்ற ஆதவ் அர்ஜூனா பையில் சரக்கு பாட்டில் இருந்ததாகவும், அதையும் சமூக வலைதளங்களில் பெரிதாக்கி பேசப்பட்டதாகவும் அந்தணன் குறிப்பிட்டார்.
"விமான நிலையத்துக்குள் சென்ற பிறகு அங்கேயே வாங்கிக் கொள்ளலாம். அப்படியிருக்க, தனி விமானத்தில் செல்லும்போது ஒருவர் எடுத்துச் சென்றதை பெரிய விஷயமாக காட்டுவது சரியா?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு கத்தரிக்கோலுக்கு பின்னால் ஜோதிடம் என்ற புதிய கோணம்... விஜய் தொடர்பான இந்த சம்பவத்தை இணையத்தில் பெரிய விவாதமாக மாற்றியுள்ளது. இந்த தகவல்களில் எது உண்மை? எது ஊகம்? என்பது குறித்து ரசிகர்களும், அரசியல் வட்டாரங்களும் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர்.











Click it and Unblock the Notifications