வெற்றிபெற்ற தருணத்தை பார்த்து கண்கலங்கிய விஜி...ஆறுதல் கூறும் ரசிகர்கள்
சென்னை: உறவினர்களுடன் அமர்ந்து தான் வெற்றி பெற்ற தருணத்தை பார்த்து விஜி கண்கலங்கி உள்ளார்.
பட்ட வேதனைகள் கண் முன்னே வந்து போனதா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
விஜியின் வெற்றி பல ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்துள்ளது.

கண்கலங்கிய விஜி
சர்வைவர் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று ஆரம்பத்திலிருந்து ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில் தற்போது வெற்றிக் கோப்பையை கைப்பற்றி இருப்பது விஜயலட்சுமி தான். இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் ஆக இருந்துவருகிறது. விடாமுயற்சியினால் வெற்றி கோப்பையை பெற்றிருந்தாலும் அந்த தருணத்தை பார்த்து கண்கலங்கி உள்ளார்.

குழந்தைகளை கவர்ந்த சூப்பர் அம்மா
விஜயலட்சுமி பொதுவாக சினிமா நடிகையாக இருந்தாலும் ஒரு சினிமா குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்தான். இவர் சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்து அனைத்திலும் கலக்கியவர் தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெறாவிட்டாலும் அதற்கு பிறகு தன்னுடைய திறமையை எப்படியாவது நிரூபித்து விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தவர். அவர் சூப்பர் மாம் என்னும் ஒரு பட்டத்தை தட்டி குழந்தைகளின் ஃபேவரைட் அம்மாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

குறையாத விடாமுயற்சி
ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்வதில் விருப்பத்தில் இருக்கும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விட்ட இடத்தை எப்படியும் சர்வைவர் நிகழ்ச்சியில் பெற்றுவிட வேண்டும் என்றுதான் முழு முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருந்தார். அதனால்தான் தன்னுடைய மொத்த திறமையையும் ஒவ்வொரு விளையாட்டுகளிலும் காட்டி கொண்டிருந்தார். இவருடைய போதாத காலம் இவர் சரணால் மூன்றாவது உலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனாலும் அங்கே சென்ற பிறகும் என்னுடைய தைரியத்தை விட மாட்டேன் என்று டாஸ்க்களால் ஜெயித்து மீண்டும் சர்வைவருக்கு வந்துவிட்டார்.

உணர்ச்சிவசப்பட்ட தருணம்
மீண்டும் சர்வைவருக்கு விஜயலட்சுமி வந்ததை பார்த்து சக போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் ஆடி போயிருந்தனர். இந்த நிலையில் கடைசி நாட்களில் விஜயலட்சுமிக்கு சக போட்டியாளர்கள் மன ரீதியாக பல பிரச்சனைகளையும், குழப்பங்களையும் கொடுத்துக் கொண்டிருந்தாலும் அனைத்தையும் தாண்டி தன்னுடைய வெற்றியில் கவனத்தை செலுத்தி அவரே வெற்றிக்கனியை பறித்து விட்டார். அவர் வெற்றி பெற்று வீட்டிற்கு வந்து விட்டாலும் நேற்றைய எபிசோட்டை வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக இருந்து பார்க்கும் போது இவரால் அந்த நினைவுகளை மறக்க முடியாமல் கண்கலங்கி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்ததும் ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்துக்களையும் ஆறுதலையும் அளித்து வருகின்றனர்.
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம்












Click it and Unblock the Notifications