கல்யாணத்துக்கு முன்னாடியே முதலிரவு.. அம்பலப்படுத்திய விஷ்ணுகாந்த்.. சம்யுக்தா பதிலடி
சென்னை: சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் தன்னுடைய மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை பற்றி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
அதில் திருமணத்திற்கு முன்பே தங்களுக்கு முதலிரவு நடந்து விட்டது என்றும் கூறியிருக்கிறார்.
அது குறித்து ஒரு பெண்ணை கேவலப்படுத்த வேண்டும் என்றால் அவருடைய கேரக்டரை வைத்து செய்கிறார்கள் என்று சம்யுக்தா பதிலடி கொடுத்திருக்கிறார்.

சின்னத்திரை தம்பதிகள் ஆன சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவருக்கும் சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது. திருமணத்திற்கு பிறகு சில மாதங்களுக்குள் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்திருக்கும் நிலையில் சமூக வலைத்தளத்தில் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.
தங்கள் இருவருக்கும் எதனால் பிரச்சனை ஏற்பட்டது என்றும் தன் மீது தப்பில்லை என்றும் விஷ்ணுகாந்த் youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதை தொடர்ந்து சம்யுக்தா லைவில் விஷ்ணுகாந்த் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் கொடுத்து இருந்தார். இப்படியே தொடர்ந்து கொண்டிருக்கும் இவர்களுடைய கருத்து மோதல்களும் இன்னும் முடிவடையவில்லை.
சில தினங்களுக்கு முன்பு திருமணத்திற்கு முன்பு சம்யுக்தா என்னை காதலித்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு நபரிடமும் காதலிக்கிறேன் என்று கூறி பேசிக் கொண்டிருந்தார் என்று ஆடியோ ஆதாரங்களை விஷ்ணுகாந்த் வெளியிட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து எங்களுடைய திருமணத்தில் புடவை வாங்குவதிலிருந்து முதலிரவு எங்கே வைப்பது என்பது பற்றி தான் பிரச்சனை ஆரம்பத்தில் தொடங்கியது என்று விஷ்ணுகாந்த் கூறியிருந்தார்.

அப்போது விஷ்ணுகாந்திடம் நடிகை சகிலா உங்கள் இருவருக்கும் திருமணத்திற்கு முன்பு முதல் இரவு நடந்து விட்டதா என்று கேள்வி கேட்டிருந்தார்.அதற்கு விஷ்ணுகாந்த் ஆமாம் என்பது போல தலையாட்டி பதில் அளித்து இருந்திருக்கிறார். அப்போது உங்களுக்கு ஏற்கனவே அது முடிவு அடைந்து இருந்தால் பிறகு எதற்காக முதல் இரவு உங்கள் வீட்டில் தான் வைக்க வேண்டும் என்று நீங்கள் பிரச்சனை செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
தற்போது இது பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சம்யுக்தா விஷ்ணுகாந்திற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அதில் ஒரு பெண்ணை களங்கப்படுத்த வேண்டும் என்றால் அவருடைய கேரக்டரை தான் சிலர் கொச்சைப்படுத்துகிறார்கள். இது இன்னும் எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லை. ஆனால் இதையெல்லாம் கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். என்ன நடந்தது என்று அதற்கான பதிலும் தருவார் என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications