கயல் சீரியல் சுபாஷினி இறப்பதற்கு முன்பு நடந்தது இது தான்! ரியாஸ் கான் வீட்டு பங்க்ஷனில்! நடிகை உருக்கம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்த நடிகை சுபாஷினியின் திடீர் மரணம் ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் இறந்து சில நாட்கள் கடந்துவிட்ட நிலையில் அவருடன் சீரியலில் ஒன்றாக நடித்த நடிகை அபிநவ்யா சுபாஷினி பற்றி சில தகவல்களை உருக்கமாக பேசியிருக்கிறார்.

யார் இந்த சுபாஷினி?
சுபாஷினி, சன் டிவியின் பிரபலமான "கயல்" சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். இயல்பான நடிப்பாலும், அமைதியான தன்மையாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார். சீரியல் குழுவினருடனும், குறிப்பாக சக நடிகர்களுடனும் நெருக்கமாக பழகியவர் என கூறப்படுகிறது.
எப்படி நடந்தது இந்த சம்பவம்?
சுபாஷினி தற்கொலை செய்து கொண்ட நாளில், தனது வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. அதே சமயம், பெங்களூரில் வசித்து வரும் அவரது கணவர் பிபின் சந்திராவுடன் வீடியோ கால் மூலம் பேசியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கு பிறகே இந்த துயரமான முடிவு ஏற்பட்டதாக சொல்லப்படுவது சம்பவத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வீடியோ கால் விவரம், அவரின் கடைசி போன் செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்தும் ஆய்வு செய்யப்படுகிறது.
கணவர் மீது குற்றச்சாட்டு
சம்பவத்திற்குப் பிறகு சமூக வலைதளங்களில் பலரும் நேரடியாக அவரது கணவர் பிபின் சந்திராவையே குற்றம் சாட்டி விமர்சித்து வருகின்றனர். ஆனால் எந்த உறுதியான ஆதாரமும் இல்லாமல் இத்தகைய குற்றச்சாட்டுகள் பரவுவது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இதற்கிடையில், பிபின் சந்திரா தனது சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். "நீ இல்லாமல் நான் இல்லை... இதை நம்ப முடியவில்லை... நீ எப்போதும் என்னுள் வாழ்கிறாய்..." என்று தனது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால், ஒருபுறம் குற்றச்சாட்டு, மறுபுறம் அனுதாபம் என இருவிதமான கருத்துக்கள் பரவி வருகின்றன.
சக நடிகை அபிநவ்யா வருத்தம்
சுபாஷினியுடன் "கயல்" சீரியலில் நடித்த நடிகை அபிநவ்யா, இந்த சம்பவம் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். "சுபாஷினி எங்களுடன் 9 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடித்தார்." "சமீபத்தில் ஆறு ஏழு மாதங்களாக அவருக்கு ஷூட்டிங் குறைவாக தான் இருந்தது. ஆனாலும், எங்களுடன் நல்ல தொடர்பில் இருந்தார்." அவர் தனது கணவர் பற்றி ஒருபோதும் தவறாக பேசியதே இல்லை."
உமர் ரியாஸ்கான் வீட்டு பங்க்ஷன்
இருவரும் மிகவும் பொருத்தமான தம்பதிகள் போலவே இருந்தார்கள். மேலும், சமீபத்தில் நடிகை உமாரியாஸ்கான் குடும்ப விழாவில் கூட இருவரும் சேர்ந்து வந்ததாகவும், அவர்களுக்குள் பெரிய பிரச்சனை இருந்ததாக எதுவும் தெரியவில்லை என்றும் கூறினார். மேலும் அவர்கள் இருவரும் தம்பதிகளாக அழகாக இருந்தார்கள் அதை பார்த்து என்னுடைய அம்மாவை இவர்கள் பொருத்தமான ஜோடி என்று பாராட்டுனாங்க.
ஆனால் சுபாஷினி இப்படி ஒரு முடிவு எடுப்பார் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. என்ன நடந்தது என்று எங்களுக்கே புரியவில்லை என்று அபிநவ்யா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
கடைசி இன்ஸ்டாகிராம் பதிவுகள்
சுபாஷினியின் கடைசி சமூக வலைதள பதிவுகளும் தற்போது அதிகமாக பேசப்படுகிறது. அதில் அவர் மகிழ்ச்சியாக வெளிநாட்டில் சுற்றுலா சென்று இருந்த ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு இருந்தார். இதனால், "இவ்வளவு சந்தோஷமாக இருந்தவர் ஏன் இப்படிச் செய்தார்?" என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுகிறது.
-
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
Iran-US war LIVE: போர் நிறுத்தம் அறிவித்தாலும் தொடரும் தாக்குதல் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி













Click it and Unblock the Notifications