தமிழ் செல்வியாகிய நான்... உறுதி மொழி என்னாச்சு? கல்யாணத்துக்கு வந்து நின்னாச்சே...!
சென்னை: சன் டிவியின் தமிழ்செல்வி சீரியல் எடுத்த எடுப்பில் தமிழ்செல்வியின் கல்யாண ஏற்பாடுகளில் ஆரம்பிக்குது.
சின்ன கிராமம்...கிராமத்து பள்ளியின் தரமற்ற கட்டிட நிலையை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு,இப்போது அந்த பள்ளி நல்ல புதிய தரமான கட்டிடத்தில் நடைப்பெற்று வருகிறது.
பன்னிரண்டாம் வகுப்பு படிச்ச தமிழ்செல்வி, ஒன்பதாம் வகுப்பு படிச்ச தன் அத்தை மகனை இன்னும் கொஞ்ச நேரத்தில் திருமணம் செய்துக்க போறா. அந்த ஏற்பாடுகள்தான் இப்போ நடந்துகிட்டு இருக்கு.
தமிழ்செல்வி உறுதி மொழி
கல்யாணப் பெண்ணான தமிழ் செல்வியிடம் வகுப்பு தோழிகள் போனில் பேசறாங்க.நீ பாட்டுக்கு மறந்துட்டு கல்யாணத்துக்கு தயாராகிட்ட... நாங்கதான் அதையே நினைச்சுகிட்டு இருக்கோம்னு சொல்றாங்க.தமிழ்செல்வி பேசாமலிருக்க... சரி சரிடி உன் கழுத்துல தாலி ஏறும்போது நாங்க உன் பக்கத்துல இருப்போம்னு சொல்றாங்க.
எடுத்த உறுதி மொழி
அப்போதுதான் பள்ளி பிரேயர் போது நீராரும் கடலுடுத்த பாடிவிட்டு,தான் கை நீட்டி உறுதி மொழி எடுத்துக் கொண்டதை நினைக்கிறாள் என்ன உறுதி மொழி என்பதை நமக்கு காமிக்கலை
கல்யாண பொண்ணுக்கு ஃபிட்ஸ்
கல்யாண பொண்ணு தமிழ்செல்வி மணமேடை நோக்கி வரும்போது லேஸா மயக்கம் வருது.பின் தள்ளாடுகிறாள்.கடைசியில் ஃபிட்ஸ் வந்துருது. இப்போது ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்துட்டு, எல்லாரும் காவல் காத்து நிக்கறாங்க. திங்கள் முதல் சனி வரை வாரம்தோறும் மாலை 6:30 மணிக்கு சந்திரகுமாரி முடிவடைந்த நிலையில் இந்த சீரியல் ஒளிபரப்பாகிறது.
ஆமாம்.. தமிழ்செல்வி நிஜமாவே மயங்கி விழுந்தாளா.. இல்லை வேணும்னு மயங்கினாளா? பார்க்கலாம்....!