அனுமனுக்கு ஆத்ம சுகம் தந்த எம்பெருமான்.. ஆஹா ..என்ன ஒரு பரவசநிலை!
சென்னை: சன் டிவியின் ஜெய் அனுமான் சீரியல் ரொம்ப நல்லாருக்கு.அனுமன் பக்தியைப் பத்தி தெரிஞ்சுக்க ஒரு அரிய வாய்ப்புன்னு சொல்லலாம்.
சிறுவன் அனுமனாக நடிபவன் ரொம்ப அருமையா நடிச்சுருக்கான்.அனுமனுக்குல் இருக்கும் பக்தி உணர்வை வெளிப்படுத்துவதில் சிறுவன் உண்மையில் மிக ஆத்மார்த்தமா நடிச்சு இருக்கான்.

இதுவரையான அனுமனின் சக்திகள் அனைத்தும் மறந்து போகட்டும் என்று முனிவர் ஒருவர் சபித்துவிட சிறுவன் அனுமன் சக்தி மறந்து அன்னையின் மடியில் துவண்டு படுத்து இருக்கான்.
சிவ பெருமானின் திருவிளையாடலால் முயல் குட்டி ஒன்று அனுமனின் கண்ணில் படுகிறது.அம்மா இந்த முயல் குட்டி மிகவும் அழகாக இருக்கிறது. இன்று முதல் இவனை என் நண்பனாக்கிக் கொள்ள போகிறேன் என்று அனுமன் அம்மாவிடம் சொல்றான்.

அதைத் தேடி ஓடும் அனுமனை அழைக்கிறார் அம்மா, அனால், தந்தையோ வேண்டாம் அஞ்சனை..இப்போதுதான் அவனுக்குள் புது சக்தி கிடைத்தது போல ஆனந்தமாக இருக்கிறான். விளையாடிவிட்டு வரட்டும் என்று கூறுகிறார்.
முயலைத் துரத்தி வந்த அனுமனின் கண்ணில் எம்பெருமான் சிவன் காட்சி தருகிறார். பிரபு நீங்கள் என்னை காண வருவீர்கள் என்று தெரியும்.. ஆனால், இவ்வளவு விரைவில் பாக்கியம் கிடைக்கும் என்று நினைக்கவில்லை பிரபு என்று மகிழ்கிறான் அனுமன்.

பிரபு சிறுவன் அனுமன் முன் மண்டியிட்டு அமர, அனுமன் கண்களில ஆனந்த கண்ணீர் பிரவாகம் எடுக்குது. மேலிருந்து பார்வதி, பிரம்மன், இந்திரன் எல்லாரும் இந்த காட்சியைக் கண்டு மகிழ்கிறார்கள்.
தன் அவதாரமாக பிறந்த அனுமன் முன் சுவாமி மண்டியிட்டு நிற்கும் காட்சி அபூர்வமானது. எத்தனையோ பக்தர்கள், முனிவர்கள் பிரபுவின் தரிசனம் கிடைக்காதா என்று காத்திருக்க, அனுமனுக்கு என்ன ஒரு பாக்கியம்.அதைக் காணும் நமக்கும் பேரானந்தம்னு பார்வதி சொல்றாங்க.

வா அனுமன் என்னை கட்டிக்கொள் என்று சிவ பெருமான் அழைக்க இருவரும் தழுவிக் கொள்கிறார்கள். அனுமன் பரவச நிலை அடைந்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறான்.
இது போன்ற பேரானந்தம் நான் என்றுமே அடைந்ததில்லை என்கிறான் சிறுவன் அனுமன். இது ஆத்ம சுகம் அனுமான். உனக்கு இனி வித்தைகளை ஆசானாக இருந்து நானே கற்றுத் தரப்போகிறேன் என்று சிவன் சொல்ல சிறுவனின் முகத்தில் பரவசம். நடிப்பு மிக அற்புதம்..
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications