நடிகையை சீண்டிய 2 பிரபல நடிகர்கள்.. "முத்துலட்சுமி"க்கு வந்த சோதனை? மீண்டும் முதல்ல இருந்தா
சென்னை: கேரளாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஹேமா கமிட்டி அறிக்கை உண்டுபண்ணியிருந்த நிலையில், மீண்டும் ஒரு பரபரப்பு சம்பவம் அங்கே நடந்துள்ளது.. அதேபோல கன்னட திரையுலகிலும் பாலியல் புகார் வெடித்து கிளம்பியிருப்பது, திரைவட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள திரையுலகில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கையானது, வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தியிருந்தது.. இந்த அறிக்கை வெளியானதுமே, நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக், டைரக்டர் ரஞ்சித், நடிகரும் எம்எல்ஏவுமான முகேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது..

ராஜினாமா: அதேபோல, கேரளா நடிகர்கள் சங்கத்தின் AMMA (Association of Malayalam Movie Artists) நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தது அதற்கு மேல் பரபரப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி இருந்தது.
இதையடுத்து நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு நியமித்தது. இந்த குழுவானது விசாரணை நடத்தி மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணைகளும் நடந்து வருகின்றன. மலையாள சினிமாவில் எல்லை மீறலுக்கு காரணம் என்ன? என்பது குறித்த விவாதங்களும் மற்றொருபக்கம் சோஷியல் மீடியாவில் எழுந்தன.
நடிகைகள்: மலையாள படங்கள் பெரும்பாலும் வெவ்வேறு லோகேஷன்களில் எடுக்கப்படுகின்றன. இதனால் நடிகைகள் மாதக்கணக்கில் தங்கள் வீட்டை விட்டு பிரிந்திருக்க நேரிடுகிறது. இதனால் அவர்களிடம் தவறாக நடந்துகொள்கிறார்கள். மற்ற சினிமா துறைகளைவிட, மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு என்று நடிகை சுகாசினி சமீபத்தில்கூட தன்னுடைய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதே மலையாள திரையுலகில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி 2 நடிகர்கள் மீது சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள சீரியல்: சினிமாவில் வாய்ப்பு தருவதாக தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மலையாள சீரியல் நடிகை ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். திரையுலகினரின் பாலியல் வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவிடமே இந்த புகாரை, மலையாள சீரியல் நடிகை தந்திருப்பது, மீண்டும் மல்லுவுட்டில் புயலை கிளப்பியிருக்கிறது.
சீரியல் ஷூட்டிங்கில் தான் கலந்து கொண்டிருந்தபோது நடிகர் பிஜூ ஷோபானம், ஸ்ரீகுமார் ஆகியோர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் அந்த நடிகை புகார் தந்துள்ளார்.. இதையடுத்து, நடிகை தந்த புகார் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை நடத்தியிருக்கிறது..

அறிவுறுத்தல்: பிறகு இது குறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்ஃபோ பார்க் போலீசாருக்கும் அறிவுறுத்தியிருக்கிறது. இதையடுத்து, நடிகர்கள் பிஜூ ஷோபானம், ஸ்ரீகுமார் ஆகியோர் மீது போலீசார் பாலியல் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சூழலில், நடிகர்கள் மீது புகார் கொடுத்த அந்த நடிகை, தான் நடித்து வந்த சீரியலில் இருந்து விலகியிருக்கிறாராம்.. ஆனால், நடிகர்கள் மீது பாலியல் புகார் அளித்ததற்காக அந்த நடிகை சீரியலில் இருந்து விலக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதேபோல கன்னட திரையுலகிலும் ஒரு புகார் முளைத்துள்ளது.. "முத்துலட்சுமி" என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் சாரித் பாலப்பா. இவர் மீது கன்னட தொலைக்காட்சி நடிகை ஒருவர் பெங்களூரு ஆர்.ஆர்.நகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தொந்தரவு: அந்த புகாரில் சாரித் பாலப்பா என்னை காதலிப்பதாகக் கூறி அவரது ஆசைக்கு இணங்கும்படி என்னை வற்புறுத்தினார். ஆனால் நான் மறுக்கவே, என்னை தொடர்ந்து தொந்தரவு செய்தார். நண்பர்களுடன் ஒருமுறை என் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து என்னை துன்புறுத்தினார். பணம் தராவிட்டால் எனது அந்தரங்க போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பரப்பிவிடுவதாக மிரட்டினார். அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் சாரித் பாலப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications