திருத்தணியில் திருமணம் முடிந்ததும் நடிகர் பிரேம்ஜி முகத்தில் 1000 வாட்ஸ் பல்ப்! மணப்பெண் யார்?
சென்னை: ஒரு வழியாக நடிகர் பிரேம்ஜிக்கு இன்று காலை திருத்தணியில் திருமணம் நடந்து முடிந்துவிட்டது. அவருடைய மனைவி இந்து யார் தெரியுமா?
நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜிக்கு 45 வயதாகிறது. அவருக்கு ஒரு திருமணம் நடக்காதா என அவருடைய தந்தை கங்கை அமரன் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்தார். அவருக்கு பெண்ணையும் தேடி வந்தார்.

பிரேம்ஜி இயக்குநரும் ஆவார். இவர் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் அவருடைய உறவினர் யுவன் ஷங்கர் ராஜாவிடம் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். பிறகு பின்னணி பாடகராக மாறினார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பெரும்பான்மையான ராப் பாடல்களை பிரேம்ஜி பாடியுள்ளார். அது போல் சில ஆல்பங்களையும் தயார் செய்திருக்கிறார். 2006 ஆம் ஆண்டு சிலம்பரசனின் வல்லவன் படத்தில் கதாநாயகியின் தோழனாக பிரேம்ஜி அறிமுகமானார். இவர் சென்னை 600 028 என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் அவரை நகைச்சுவை நடிகராக மாற்றியது.
பிறகு சரோஜா, கோவா, மங்காத்தா, சேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்து பார்த்து அந்த யோகமானது தற்போதுதான் கூடியது. பிரேம்ஜிக்கு இன்றைய தினம் காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள்ளாக திருத்தணி அருள்மிகு முருகன் சன்னதியில் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் பிரேம்ஜியின் மனைவி யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அதில் அவர் மீடியா துறையில் வேலை பார்ப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இது தவறு என வெங்கட் பிரபு மறுத்துள்ளார். மேலும் அந்த பெண்ணின் பெயர் இந்து என்றும் அவர் ஒரு வங்கி அதிகாரி என்றும் இந்துவும் பிரேம்ஜியும் காதலித்து வந்ததாகவும் இரு வீட்டிலும் சொல்லி தற்போது திருமணம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
கங்கை அமரன் வீட்டில் நீண்ட நாளாக எதிர்பார்த்து நடக்கும் விஷயம் என்பதால் இது குறித்து வெங்கட் பிரபு சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. "பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார்? சொப்பன சுந்தரியை இப்போ யார் வெச்சிருக்கா!" இதை எல்லாவற்றையும் விட, பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?" என்ற உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்.

வரும் 9 ஆம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம் ஜி தான் விரும்பும் பெண்ணை அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். அம்மா வெகுவாக எதிர்பார்ந்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம்.
இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார். எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலாவுகின்றன. மணமகள் மீடியாவை சேர்ந்தவர் இவ்லை. திருமணம் முடிந்தடன் புகைப்படங்களைப் பகிர்கிறேன். எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி, அதையும் வைரலாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரும் சந்திப்போம்" என்று குறிப்பிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications