"புல்லியிங் கேங்" பூர்ணிமா எவிக்ட் ஆவாருன்னு நெனச்சோம்..ஆனால் ஐஷு ஏன்? பின்னணியில் பரபரப்பு தகவல்கள்
சென்னை: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து பூர்ணிமா வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக ஐஷு வெளியேற்றப்பட்டது ஏன் என்பதற்கான காரணம் தெரிந்துவிட்டது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக பிரதீப் ஆன்டனி வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த அளவுக்கு அவர் நாமினேஷனில் இருந்தாலும் அவரை மக்கள் எலிமினேட் செய்யாமல் ஓட்டு போட்டபடி இருந்தனர்.

இந்த நிலையில் பிரதீப் ஆன்டனி மீது மாயா, ஜோவிகா, ஐஷு, பூர்ணிமா ஆகியோர் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். கதவை திறந்தபடியே சிறுநீர் கழிப்பது , திடீரென இரவு நேரத்தில் எழுந்து உட்கார்ந்து கொண்டு வைத்த கண் வாங்காமல் யாரையாவது பார்த்துக் கொண்டிருப்பது போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
இதையடுத்து பெண்களுக்கு பாதுகாப்பு எல்லா இடங்களிலும் உறுதி செய்ய வேண்டும் என பேசிய கமல் சேனல் நிர்வாகத்தினருடன் கலந்து பேசி பிரதீப் ஆன்டனிக்கு ரெட் கார்டு கொடுப்பதாக தெரிவித்தார். இதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். பிரதீப் ஆன்டனியிடம் விளக்கமே கேட்காமல் இப்படி செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவே இவர்கள் கூறுகிறார்கள்.
நிக்ஸன் ஐஷுவிடம் எல்லை மீறி நடக்கிறார். மாயா, பூர்ணிமா ஆகியோர் 18 பிளஸ் ஜோக்குகளை பேசுகிறார்கள். மாயா தனது உள்ளாடையை எடுத்து ஆண் போட்டியாளரிடம் காட்டி மாஸ்க் போல் அணிந்து கொண்டார். இப்படியெல்லாம் சம்பவங்கள் நடக்க பிரதீப் ஆன்டனியை வெளியேற்றியது ஏன் என கேள்வி எழுப்பினர்.
அது போல் சனிக்கிழமை அன்று விசித்ரா, கமலிடம் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது ஏன் என கேட்டிருந்தார். மேலும் புல்லியிங் கேங்கை பார்த்தால் எங்களுக்க பயமாக இருக்கிறது என கூறிய நிலையில் அந்த கேங்கிலிருந்து பூர்ணிமா வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக ஐஷு எவிக்ட் செய்யப்பட்டுவிட்டார்.
ஐஷு நடன கலைஞர் அமீருக்கு தங்கை போன்றவர். ஐஷு நடந்து கொள்வதை பார்த்து அமீரே தனது தங்கைக்கு எதிராக ட்விட் போட்டிருந்தார். அது போல் நிக்ஷனுடன் ஐஷு பழகுவதை பார்த்த அவரது பெற்றோர் கண்டித்தபடியே பேட்டி கொடுத்து வந்தனர். இந்த நிலையில்தான் ஐஷு ஏன் எவிக்ட் செய்யப்பட்டார் என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட போது ஐஷுவின் குடும்பத்தினர் அவரது விளையாட்டை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனராம். ஆனால் நாட்கள் செல்ல செல்ல நிக்ஸனுடன் ஏற்பட்ட பழக்கம் அவரு்கு வெளியே கெட்ட பெயரை பெற்றுக் கொடுத்துவிட்டதாக பெற்றோர் கவலை தெரிவித்தனர். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவை தொடர்பு கொண்ட அவர்கள், ஐஷு விளையாடினது போதும், ரூ 50 லட்சம் பணம் , புகழை விட எங்களது மகளுக்கு பெயர்தான் முக்கியம் என கூறி அவரை வெளியேற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டனராம். இதனால்தான் ஐஷு எவிக்ட் செய்யப்பட்டார் என்கிறார்கள்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications