Aranmanai Kili Serial: உங்களுக்கே பயம் வருதுல்ல... எதுக்கு அந்த சீன்ஸ் வைக்கறீங்க?
சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் அர்ஜுனுக்கு தெய்வ சாபமாம். அவன் உயிர் போவது உறுதியாம். சித்தர் அடிச்சு சொல்லிடறார்.
புருஷன் உயிரை எப்பாடு பட்டாவது மீட்பேன் என்று சொல்லி சித்தரிடம் பரிகாரம் கேட்டு வாதாடுகிறாள் ஜானு. உன் புருஷனுக்கு கிடைத்த சாபம் கிடைத்ததுதான்... அதை மாத்த முடியாது என்று சொல்லிவிடுகிறார் சித்தர்.
ஜானுவுக்கு புருஷன் செத்துடற மாதிரி கெட்ட கனவு வருது. இதை அடுத்துதான் மேற்கண்ட சித்தர் சொன்னது எல்லாம். இந்த சீரியலை ஒளிபரப்பிவிட்டு, இது வெறும் கற்பனை கதைதான். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல என்றெல்லாம் பொறுப்பு துறப்பு அடிக்கடி ஸ்க்ரோலிங்க்ல விடறாங்க.

இருக்குல்ல இந்த பயம்
ஜானு நினைக்கும்போது சித்தரை பார்த்து விடுகிறாள். மற்றவர்கள் போனால்தான் காத்து கிடக்க நேரிடுது.கணவனின் கால் நடக்க வேண்டும் என்று வேண்டுதல் வைத்து, நடந்தால் என் உயிரை தருகிறேன் என்று சாமிக்கு தனது உயிரை காணிக்காகையாக வைக்கிறாள். அப்படி வேண்டுதல் வைத்துவிட்டு மறந்தும் விடுகிறாள். புருஷன் சும்மா ஒரு அடி மட்டும்தான் எடுத்து வைக்கிறான். அதற்குள் ஜானுவின் உயிரை சித்தர் வந்து கேட்கிறார்.

ஜானு உயிருக்கு பதில்
இதை தெரிஞ்சுக்கிட்ட அர்ஜுன் அதே சாமியிடம் வந்து அவன் ஒரு வேண்டுதல் வைக்கிறான். ஜானுவின் உயிருக்கு பதில் தனது உயிரை காணிக்கை என்று சொல்கிறான். இதை பிடிச்சுக்கிட்டு கதையை மாத்தி மாத்தி கொண்டு போறாங்க. இப்போ அர்ஜுனுக்கு சாமியின் சாபம் விழுந்துவிட்டதாம். அவன் உயிர் போகப் போவது உறுதியாம்.

அர்ஜுன் நடக்கலை
வேண்டுதல் வச்சு நிறைவேத்தியும் கூட அர்ஜுன் இன்னும் நடக்கலை. அவன் நடக்காமல் இருந்தால்தான் கதை எனும்போது எதற்காக இந்த சித்தர் வாக்கு, வேண்டுதல், பரிகாரம் இதெல்லாம் என்று தெரியவில்லை. இப்போது அர்ஜுன் உயிர் நிச்சயம் போய்விடும், அவன் மேல் தெய்வ சாபம் இருக்குன்னு சொல்றார் சித்தர்.

மீட்பேன் புருஷன் உயிரை
சாமிக்கு எதையாவது செய்து, எப்படியும் புருஷன் உயிரை மீட்பேன் என்று சங்கல்பம் எடுக்கிறாள் ஜானு. அதன் படி சித்தரிடம் சென்று என் புருஷன் உயிரை மீட்பேன் சாமி. அதுக்கு நீங்க வழிமுறை சொல்லுங்கன்னு மன்றாடுகிறாள். சித்தர் ஒப்புதல் தரவில்லை. இருந்தும் அவளுக்கு மீண்டும் கனவு வந்து அதில் அர்ஜுன் உயிருக்கு போராடுவது போல் வருகிறது.மீண்டும் சித்தரிடம் போகிறாள் ஜானு.

எடுப்பானேன் பயப்படுவானேன்
இப்படி உங்க இஷ்டத்துக்கு கற்பனை செய்து கதையை எழுதிவிட்டு, அதை ஒளிபரப்பும்போது எல்லா நேரத்திலும் ஸ்க்ரோலிங் பொறுப்பு துறப்பு போடுகிறீர்கள். எதற்கு இப்படிப்பட்ட காட்சிகளை எடுப்பானேன், பிறகு பயம் கொள்வானேன்? அதற்காக கதை முழுக்க இப்படியேவா? முடியலைங்க... அந்த நேரத்தை இப்படியா நாங்க செலவிடனும்? இன்னும் இருவரும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழக் கூட ஆரம்பிக்கலை.. ஜானு அதற்குள் இவ்வளவு தியாகமா?
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications