Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் அஜித்தை விடுங்க.. பிரபல தயாரிப்பாளரின் பிடிவாதத்தால் பார்த்திபனுக்கு பறிபோன பம்பர் வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் எதிலும் வித்தியாசங்களை விரும்பும் இயக்குனர் மற்றும் நடிகர் ஆர். பார்த்திபன் இன்று தனது 65 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

தமிழ் சினிமாவில் பல புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் எப்பொழுதும் ஆர்வமாக இருப்பவர் பார்த்திபன். ரொமான்டிக் காமெடி கலந்த கதைகளில் கதாநாயகனாக ஸ்கோர் செய்வதில் ஸ்பெஷலிஸ்ட் ஆவார்.

why Parthiban couldnt act with actress Aishwarya Rai

அப்படிப்பட்ட பார்த்திபனுக்கு உலக அழகி ஐஸ்வர்யா ராய் உடன் ரொமான்ஸ் செய்யும் வாய்ப்பு கிடைத்தும் தயாரிப்பாளருடன் இருந்த சிறிய மனக்கசப்பால் நூலிழையில் தவறிப் போய் இருக்கிறது.

நடிகர் மற்றும் இயக்குனருமான கே.பாக்யராஜ் இடம் உதவியாளராக பணியாற்றி பின்பு புதிய பாதை படத்தை இயக்கி நடித்ததன் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பார்த்திபன். எதிலும் ஒரு வித்தியாசத்தை விரும்பும் பார்த்திபன் தமிழ் சினிமாவின் யாரும் யோசிக்காத சில புதிய முயற்சிகளை தன்னுடைய படங்களில் மேற்கொள்வார்.

அதனாலேயே சீனியர் ஆர்டிஸ்டாக இருந்தும் முன்னணி கதாநாயகர்களை தன்னுடைய படங்களில் நடிக்க வைக்க முடியவில்லை. 'ஒத்த செருப்பு' என்கின்ற படத்தின் மூலம் மோனோ ஆக்டிங் ஸ்டைலை முயற்சித்த பார்த்திபன், 'இரவின் நிழல்' படத்தின் மூலம் சிங்கிள் ஷாட் மூவி என்று ஒரே ஷாட்டில் படம் முழுவதையும் ஷூட் செய்யும் முயற்சியில் இறங்கி இந்திய அளவில் பல பிரபலங்களின் பாராட்டுகளையும் பல விருதுகளையும் பெற்றிருந்தார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யாராயுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றிருந்தாலும் அதற்கு முன்பே 'கண்டுகொண்டேன்.. கண்டுகொண்டேன்' திரைப்படத்தில் ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாக நடிப்பதற்கு இயக்குனர் ராஜுவ் மேனனால் முதன் முதலில் கமிட் செய்யப்பட்டவர் ஆர். பார்த்திபன் தான்.

'நீ வருவாய் என' படத்தில் அஜித்- பார்த்திபன் காம்பினேஷன் ஒர்க் அவுட் ஆனதால் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்திலும் இவர்களை இணைந்து நடிக்க வைக்க நினைத்த இயக்குனர் ராஜீவ் மேனன் அஜித் மற்றும் பார்த்திபனிடம் கதை சொல்லி ஓகே செய்து விட்டார்.இயக்குனர் ராஜுவ்மேனன் கதாநாயகர்களாக அஜித் மற்றும் பார்த்திபனை முடிவு செய்த பின்பு தயாரிப்பாளர் கலைப்புலி தானுவிடம் சென்று பார்த்திபன் அவர்களிடம் நம்முடைய படத்தில் நடிப்பதற்கு சம்மதம் வாங்கி விட்டதாகவும், நீங்கள் சென்று அவருக்கு ஒரு ஐந்து லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.

why Parthiban couldnt act with actress Aishwarya Rai

இதைக் கேட்ட தயாரிப்பாளர் தானு இயக்குனர் ராஜீவ் மேனனிடம் பார்த்திபன் நடிப்பதென்றால் இத்தோடு நான் படத்தை விட்டு விலகி விடுகிறேன் வேறொரு நல்ல தயாரிப்பாளரை வைத்து தயாரித்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.அதற்குக் காரணம் இதற்கு முன்பு அவர் பார்த்திபனை வைத்து தயாரித்த தையல்காரன் படத்தின் போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு தான் என கூறியுள்ளார்.

பின் நாட்களில் தானுவிற்கும் பார்த்திபனுக்கு இடையே இருந்த மனக்கசப்பு சரியாகி இறுதியாக வெளிவந்த இரவின் நிழல் படத்தை கூட தயாரிப்பாளர் தானு தான் டிஸ்ட்ரிபியூட் செய்திருந்தார். என்னதான் காலம் கடந்து மனக்கசப்பு நீங்கி சமாதானம் ஆகிவிட்டாலும் இனிமேல் ஐஸ்வர்யாராயுடன் ஜோடி சேரும் வாய்ப்பு பார்த்திபனுக்கு கிடைக்குமா..!!????

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+