அது நடந்து இருந்தால் நிலைமை மாறி இருக்கும்.. ராமராஜனோடு 7 பட வாய்ப்பு நழுவல்.. குமுறும் நடிகை ரேணுகா

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை ரேணுகா தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் தனக்கு நடந்த தோல்விகள் குறித்து கூறியிருக்கிறார்.

பல கம்பெனிகளில் வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்த நேரத்தில் தனக்கு அடுத்தடுத்து ராமராஜன் உடன் ஏழு படங்களில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று ஏமாற்றத்தை ஃபீல் பண்ணி நடிகை ரேணுகா கூறி இருக்கிறார்.

கதாநாயகியாக முயற்சி செய்து தனக்கு கிடைத்த ஏற்ற இறக்கங்கள் குறித்து பல தகவல்களை ரேணுகா பேசியிருக்கிறார்.

 ரேணுகாவின் குடும்பம்

ரேணுகாவின் குடும்பம்

வெள்ளி திரையில் கதாநாயகியாக கலக்கவேண்டிய தனக்கு தமிழ் திரை உலகில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு விட்டது என்று நடிகை ரேணுகா வருத்தத்தோடு பல தகவல்களை கூறி இருக்கிறார். ஆரம்பகால கட்டத்தில் இப்ப இருக்கிற மாதிரி எல்லாம் நிலைமை கிடையாதாம். அதுவும் நடிகை ரேணுகா ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்து இருக்கிறார். ரேணுகா குடும்பத்தின் மூத்த பெண்ணாக இருந்திருக்கிறார். இவருக்கு இரண்டு இளைய சகோதரர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் இவருடைய அப்பாவின் மறைவிற்குப் பிறகு சென்னைக்கு வேலை தேடி குடும்பத்தோடு வந்திருக்கின்றனர்.

 முதல் திரைப்படம் வாய்ப்பு

முதல் திரைப்படம் வாய்ப்பு

அந்த நேரத்தில் தான் கோமஸ் சுவாமிநாதனின் குழுவில் நாடக கலைஞராக வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அதற்கு பிறகு திரைப்படங்களில் வாய்ப்புக்காக பல கம்பெனிகளில் ஏறி இறங்கி கொண்டு இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் 1989 ஆம் ஆண்டு டி ராஜேந்திரன் இயக்கிய சம்சார சங்கீதம் என்ற திரைப்படத்தின் மூலமாக இவர் திரையுலகில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அந்த நேரத்தில் நடிகர் ராமராஜனுடன் இவர் 7 படங்களில் நடிக்க முடியாமல் கடைசி நேரத்தில் வாய்ப்பு நழுவி போய்க் கொண்டிருந்திருக்கிறது.

நழுவி போன வாய்ப்பு

நழுவி போன வாய்ப்பு

ராமராஜனின் திரைப்படத்திற்காக இவருடைய முகம் கோமிலியாக இருக்கிறது என்று சொல்லி இவரை போட்டோ சூட் எல்லாம் எடுப்பார்களாம். ஆனால் கடைசி நேரத்தில் அந்த திரைப்படத்தில் வாய்ப்பு வேற நடிகைக்கு கிடைத்து விடுமாம். இது இவருக்கு தொடர்ந்து கொண்டே இருந்ததால் இவருக்கு வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்ப வரைக்கும் நடிகர் ராமராஜனோடு இவர் நடிக்க முடியாமல் ஆகிவிட்டது என்ற ஏமாற்றம் இவருக்கு இருக்கத்தான் செய்கிறதாம். அந்த நேரத்தில் இவருக்கு கிடைத்த வாய்ப்பு சரியாக அமைந்திருந்தால் முன்னணி கதாநாயகியாக நானும் மாறி இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

அங்கீகாரம் கிடைக்கவில்லை

அங்கீகாரம் கிடைக்கவில்லை

தமிழ் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு அதிகமாக கிடைக்காததால் தான் இவர் மலையாள திரைப்படங்களில் நடிக்க தொடங்கினாராம் 1990 ஆம் ஆண்டில் தொடங்கி 1991 ஆம் ஆண்டிற்குள் 5 மலையாள படங்களில் நடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து ஒரு தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார். அடுத்தடுத்து இவருக்கு மலையாள திரைப்படங்களில் தான் அதிகமான வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. தமிழ் நடிகையான எனக்கு தமிழ் திரையுலகத்தில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார்.

மெட்ராஸ் பாஷை

மெட்ராஸ் பாஷை

வெள்ளி திரையில் அறிமுகம் ஆகி பல சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து இருந்தாலும் நடிகை ரேணுகா தற்போது முன்னணி திரைப்பட நடிகர்களோடு நடித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக அயன் திரைப்படத்தில் சூர்யாவின் அம்மாவாக நடித்த அசத்தி இருப்பார். அதுவும் அயன் திரைப்படத்தில் மெட்ராஸ் பாஷையில் இவர் பேசி இருப்பார். அதற்கு காரணம் அந்த திரைப்படத்தின் கதை ஆசிரியர் தானாம். அவர்தான் உங்களை எப்படியும் ஒரு வாரத்திற்குள் நான் மெட்ராஸ் பாஷை பேச வைத்து விடுகிறேன் என்று சவால் விட்டு கடைசியில் என்னை அந்த திரைப்படத்தில் அழகாக பேசவும் வைத்து விட்டார் என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+