தெருத்தெருவா அலையாறானே அர்ஜுன்... ரோஜா மனசு இளகுவாளா?
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல் ரொம்ப குவாலிட்டியா இருக்கு. கேமரா ஆங்கிள், ஃபிரேம் எல்லாம் ரொம்ப நல்லா பார்த்து பார்த்து வச்சு சீரியல் சூட் பண்றாங்க.
கதையும் ரொம்ப நல்லாருக்கு... அனாதை ஆஸ்ரமத்துல வளர்ந்த பொண்ணு ரோஜா. .ஆஸ்ரமம் கொலை வழக்கில் சீல் வைக்கப்பட்டுடுது. அர்ஜுன் வக்கீல்ன்றதுனால, ரோஜா அவன் உதவிய நாட, கடைசியில ஆஸ்ரமத்தை மீட்கற வரைக்கும் ரோஜாவுக்கு பாதுகாப்பு வேணும்ன்ற சூழல்,.
அதனால ரோஜாவை தான் ஒரு வருஷம் கான்டிராக்ட் கல்யாணம் செய்துகிட்டு, ரோஜாவை தன் பாதுகாப்பில் வச்சுக்கலாம். கேஸ் ஜெயிச்சதும் ரோஜாவை ஆஸ்ரமத்தில் விட்டுடலாம்னு அர்ஜுன் போட்ட கணக்கு தப்பாகுது.
யக்காவ்..கேட்டியா.. ஓடிப்போன வினோதினி வீட்டுக்கு வந்துட்டா!
கான்டிராக்ட் கல்யாணம் செய்துக்கிட்டது அர்ஜுன் அம்மாவுக்கு தெரிஞ்சுருது. இனிமே இந்த வீட்டுல இருக்க முடியாதுன்னு ரோஜா சொல்லாம கிளம்பிடறா. ரொம்பவும் மனசு உடைஞ்சு போன அர்ஜுன், ரோஜாவைத் தேடி தெருத்தெருவா கார்ல சுத்தறான்.
ரோஜா போற கோயிலுக்கே போறான். அங்க இருக்க ரோஜா அர்ஜுன் கண்ணில் பட்டுடாம இருக்க ஒளிஞ்சுக்கறா. இவன் ரோஜா மாதிரி குங்கும, விபூதி போட்டு பார்க்கறான். ரோஜா கிடைக்க மாட்டான்னு விபூதி வருது.
ரோஜா மாதிரி கையில கற்பூரத்தை ஏந்தி அம்மனுக்கு காமிக்கறான். அதை பார்த்து ரோஜா அழறா..சரி ரோஜா தோழி வீட்டுக்கு போயி பார்க்கலாம்னு போறான். அங்கேயும் தோழியை விட்டு இல்லைன்னு சொல்ல சொல்லிடறா.
ஆனா, அவன் கையில் இருக்கும் தீ காயத்துக்கு தன் புடவை முந்தானையை கிழித்து, மருந்தும் கொடுத்து கட்டிவிட சொல்றா. அர்ஜுன் நொந்து போன மனசோட கார் ஓட்டும்போது, கையில் இருக்கும் துணியை பார்த்தால் ரோஜா புடவை மாதிரி தெரியுது.
அப்பாடி.. ரோஜாவை கண்டுபிடிக்க அர்ஜுனுக்கு ஒரு க்ளூ கிடைச்சுருச்சுங்க...