Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்மா முன்னாடியே அட்ஜஸ்மெண்ட் கேட்ட "அந்த” நபர்.. திடீர் பரபரப்பு ஏற்படுத்திய ஜீ தமிழ் சீரியல் நடிகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபகாலமாகவே சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகைகள் பலர் தாங்கள் சந்தித்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை பற்றி வெளிப்படையாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

காரணம் தாங்கள் தயங்கி தயங்கி இருந்ததனால் தான் பலர் இதையே ஒரு சாக்காக வைத்து பல பெண்களுடைய வாழ்க்கையில் விளையாடி இருக்கிறார்கள் என்று பலர் இப்போது புரிந்து கொண்டார்கள்.

அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியல் நடிகை சுவாதி சர்மா தான் சந்தித்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசி இருக்கிறார்.

Zee Tamil ninaithale inikkum serial actress Swathi Sharma has spoken about the adjustment problems she faced

அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை என்பது பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் பல இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பலர் அதை வெளியே சொல்வதற்கு தயங்கி மறைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் ஒரு சிலர் தைரியமாக அதை வெளியில் சொல்லி தங்களிடம் தவறாக நடந்து கொண்டவர்களுக்கு பாடம் புகட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு நடிகை வரலட்சுமி தன்னிடம் தவறாக நடந்து கொண்ட ஒரு நபர் பற்றி கூறியிருந்தார். அதுபோல சின்ன திறையிலும் பல நடிகைகள் தொடர்ந்து தாங்கள் அனுபவித்த பிரச்சினைகள் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அதுபோல பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்துவரும் லாவண்யா தன்னிடம் வாய்ப்பு வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று ஒரு நபர் சொன்னதை குறித்தும் வெளிப்படையாக பேசி இருந்தார்.

அந்த வரிசையில் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் கதாநாயகி ஆக நடித்துவரும் சுவாதி சர்மா தான் தான் ஆரம்பகாலகட்டத்தில் சந்தித்த பிரச்சனை குறித்து பேசி இருக்கிறார். இவர் காலேஜ் படித்து முடித்ததும் மாடலிங் மூலமாக நடிப்பதற்கு வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தாராம். அப்போது இவருடைய அம்மாவோடு தான் வாய்ப்பு தேடி போயிருக்கிறார்.

அந்த நேரத்தில் ஒரு நபர் இவரிடம் இவருடைய அம்மா முன்பு வைத்து அட்வெஸ்மென்ட் பற்றி வெளிப்படையாக கேட்டிருக்கிறார். அதற்கு அவருடைய அம்மா அதிர்ச்சியாகி கோபமடைந்து இருக்கிறார். அப்போது சுவாதி வேகமாக கத்தி அந்த நபரை திட்டிவிட்டாராம். பிறகு வெளியே வந்த சுவாதியிடம் அவருடைய அம்மா ரொம்பவே கோபப்பட்டு இருக்கிறார்.

இதற்கு தான் இந்த நடிப்பு வேண்டாம் என்று சொல்றது, நான் கூட இருக்கும்போதே உன்னிடம் இப்படி இந்த ஆட்கள் நடந்து கொள்கிறார்கள் என்றால் நீ வெளியே தனியா நடிக்கும் போது என்னவெல்லாம் நடக்கும் என்று பயந்து இருக்கிறார். பிறகு அம்மாவை ரொம்பவே கஷ்டப்பட்டு தான் சமாதானப்படுத்தினேன் என்று சுவாதி கூறி இருக்கும் நிலையில் இந்த ஒரு நிகழ்வை நினைத்து," நினைத்தாலே இனிக்கும்" சீரியலில் சூட்டிங்காக சென்னைக்கு வருவதற்கு ரொம்பவே பயந்தேன் என்று கூறியிருக்கிறார்.

Zee Tamil ninaithale inikkum serial actress Swathi Sharma has spoken about the adjustment problems she faced

நடிகை சுவாதி சர்மா கன்னட நடிகையாக தான் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தை தொடங்கி இருக்கிறார். அவருடைய முதல் சீரியல் வாய்ப்பு கன்னடாவில் தான் கிடைத்திருக்கிறது. அங்கு கண்டேயா கதே, துரோணா மற்றும் ஃபார்ச்சூனர் போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து தான் இவருக்கு தமிழில் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்த சீரியலில் பொம்மி கேரக்டரில் நடித்து வந்த நிலையில் தற்போது பொம்மி இறந்து போய் இருப்பது போன்று கதை போய்க்கொண்டிருக்கிறது. அதை தொடர்ந்து அதே வீட்டிற்குள் ராணியாக மீண்டும் இவரே வந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+