மாமியார் Vs மருமகள்கள்.. தொகுப்பாளர் முன்பே இப்படியா நடக்கணும்? - தமிழா தமிழாவில் நடந்த சம்பவம்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான விவாத நிகழ்ச்சி தமிழா தமிழா. தற்போது இந்த நிகழ்ச்சியை சாமானிய மக்களில் ஒருவரான ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார்.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான தலைப்பை கையில் எடுத்து தமிழா தமிழா குழுவினர் விவாத மேடையை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் வகையில் கொண்டு செல்கின்றனர்.

அந்த வகையில் இந்த வாரம் மாமியார்களும் மருமகள்களும் பங்கேற்கும் விவாத மேடையாக இந்த தமிழா தமிழா நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அதுவும் ஓய்வெடுக்க சொல்லும் மருமகள் Vs ஓயாமல் வேலை பார்க்கும் மாமியார் என்ற தலைப்பில் இந்த விவாதம் நடைபெற உள்ளது.
பொதுவாகவே மாமியார் மருமகள் என்றாலே சண்டை சச்சரவு தான் என்பதை மீறி அவர்களுக்குள் அழகான பந்தமும், நல்ல புரிதலும் உள்ளது என்பதை பேசும் விதமாக இந்த நிகழ்ச்சி இருக்கும் என வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோ மூலமாக தெரிய வருகிறது.

அதுபோல தற்போது வெளியே ப்ரோமோ ஒன்றில் இந்த வார தமிழா தமிழா நிகழ்ச்சிக்கு என்ன தலைப்பு வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று ஆவுடையப்பன் கேட்டு இருக்கிறார். அதற்கு அங்கிருந்த மருமகள்களில் சிலர் "கடுகடுப்பான மாமியார் கலகலப்பான மருமகள்", "மருமகளுக்கு பயப்படும் மாமியார்", "மாமியார்களுக்கு எல்லாம் மாமியாராக இருக்கும் மருமகள்", "சுறுசுறுப்பான மாமியார் மற்றும் சோம்பேறியாக இருக்கும் மருமகள்" என்று பல தலைப்பு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் ஒரு மருமகள் அங்கிருக்கும் ஒரு பெயர் மாமியாரை குறிப்பிட்டு இதுபோல ஒரு கலகலப்பான மாமியார் தான் எனக்கு வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் எனக்கு கிடைத்தது ரொம்பவும் ஸ்ட்ரீட்டான மாமியார். இது போன்ற கலகலப்பான மாமியார் எப்போதுமே தங்கம். எங்க வீட்டில் மாமியார் எப்போதுமே சிங்கம் என்று ரைமிங்காக பேசி இருக்கிறார். இந்த ஜாலியான ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுபோல கடந்த வாரத்தில் நாட்டுக்காக போர் செய்து எல்லையில் கஷ்டப்பட்ட ராணுவ வீரர்களும் அவர்களை பிரிந்து காதலோடு காத்திருந்த மனைவிமார்களும் கலந்து கொண்டனர். அப்போது பல ராணுவ வீரர்கள் தங்களுடைய உணர்வு பூர்வமான காதலை அழகாக சொல்லி இருந்தனர். அதுபோல மனைவிமார்களும் தங்களுடைய கணவனுக்காக காத்திருந்த தருணங்கள் மற்றும் காதல், வேதனை என பல விஷயங்களையும் பகிர்ந்து இருந்தனர்.












Click it and Unblock the Notifications