கேரளா: அரிசி திருடியதாக அட்டப்பாடி பழங்குடி இளைஞர் மது அடித்து கொலை 14 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் அட்டப்பாடியில் அரிசி திருடியதாக பழங்குடி இளைஞர் மது அடித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும்.
கேரளாவை சேர்ந்த பழங்குடி இனத்து இளைஞர் மது. கடுகுமன்னா என்ற பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மல்லானின் மகன் மது. அட்டப்பாடியில் 2018-ம் ஆண்டு பல சரக்கு கடையில் அரிசி திருடினார் என்பதற்காக மதுவை அப்பகுதியினர் அடித்து சித்ரவதை செய்தனர். அப்போது போலீசார் தலையிட்டு மதுவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அப்பாவி பழங்குடி இளைஞர் மதுவை அடித்து படுகொலை செய்யும் காட்சிகளை கொடூரர்கள் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ந்த கொடூரமும் அதிரவைத்தது. மதுவின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், பட்டினியால் மது வாடிக் கொண்டிருந்ததாக தெரிவித்தனர். ஆம் மதுவின் வயிற்றில் ஒரு பருக்கை கூட உணவுப் பொருள் எதுவும் இல்லாமல் இருந்தது.
ஒட்டுமொத்த நாட்டையே வெட்கி தலைகுனிய வைத்தது இந்த சம்பவம். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யபட்டு மன்னார்காடு எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தியது. 2018-ம் ஆண்டு இந்த வழக்கில் 3,000 பக்க குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் மொத்தம் 16 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஆனால் அட்டப்பாடி மது கொலை வழக்கு ஆமை வேகத்தில் நகர்ந்து கொன்டே இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்தனர். கேரளா அரசு சிறப்பு வழக்கறிஞராக கோபிநாத் நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கான எந்த வசதியும் செய்து தரப்படாத காரணத்தால் பின்னர் தமது பதவியை ராஜினாமா செய்த அவலமும் நிகழ்ந்தது. பின்னர் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ரகுநாத், நீதிமன்றத்தில் ஆஜராகவே இல்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது.

ஒருவழியாக இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அட்டப்பாடி பழங்குடி இளைஞர் மதுவை படுகொலை செய்த 16 பேரில் 14 பேர் குற்றவாளிகள் என மன்னார்காடு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. இந்த 14 பேருக்கான தண்டனை விவரங்களை நீதிமன்றம் நாளை அறிவிக்க உள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications