Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீர்னு "நெளிந்த" யானை.. மெல்ல திரும்பி பார்த்த இன்னொரு யானை.. கடைசி நிமிஷத்தில் திரண்ட "பாகன்கள்"

கோயில் திருவிழாவில் 2 யானைகள் மிரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் கோயில் திருவிழாவில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வீடியோவாக வெளியாகி, பரபரப்பை கூட்டி வருகிறது.. அத்துடன், கோயிலில் திரண்டு வந்த பாகன்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.. என்ன நடந்தது?

பாலக்காடு அருகே உள்ள வடக்கஞ்சேரி கிழக்கஞ்சேரியில் அமைந்துள்ளது திருவரை அம்மன் கோயில்.. இந்த கோயிலில் நிறைமாலை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

இதற்காக சுற்றுவட்டார மக்கள் பெருமளவு திரண்டு வந்து திருவிழாவில் பங்கேற்பார்கள்.. அந்த வகையில், நேற்றைய தினம் திருவிழா களைகட்டியது..

 யானை யானை

யானை யானை

இந்த விழாவின்போது, அலங்கரிப்பட்ட 3 யானைகள் மீது அம்மன் வீதியுலா வந்தது... கோயிலின் அருகே யானைகள் வந்தபோது புத்தூர் தேவிநந்தன் என்ற யானை திடீரென மிரண்டு பிளிறியது.. பிறகு, பின்னாடியே வீதியுலா வந்த மற்றொரு யானையையும் தேவிநந்தன் ஓடிச்சென்று முட்டியது.. இதில் மற்றொரு யானை காயம் அடைந்ததுடன், அந்த யானையும் மிரண்டு கத்தியது.. இறுதியில் 2 யானைகளும் ஒன்றாக மிரண்டு தெருவில் ஓட ஆரம்பித்துவிட்டன.. ஓடும்போது, அங்கே கோயில் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 6 பைக்குகளையும் தூக்கிவீசின. அந்த பைக்குகள் கீழே விழுந்து நொறுங்கின..

உயிர்தப்பினர்

உயிர்தப்பினர்

யானைகள் மிரண்டோடியதால் பக்தர்களும் அலறியடித்து கொண்டு தப்பியோடி உயிர்பிழைத்தனர்... தேவிநந்தன் யானை மீது 3 பக்தர்கள் வீதியுலாவில் உட்கார்ந்து வந்திருந்தனர்.. தேவிநந்தன் பிளிற தொடங்கியதுமே அதில் ஹரீஷ் என்பவரை கீழே தள்ளி சாய்த்தது.. இவர் ஆலத்தூர் காட்டுச்சேரியைச் சேர்ந்தவர்.. 35 வயதாகிறது.. உடம்பெல்லாம் படுகாயமடைந்த ஹரீஷை போலீசார் மீட்டு வடக்கஞ்சேரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.. எனினும், மிரண்டிருந்த யானைகளை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.. அந்த கோயில் வளாகத்தில் அமைந்துள்ள நாகராஜர் கோயில் மேற்கூரையையும் இரண்டு யானைகளும் சேதப்படுத்தின.

 ஏகப்பட்ட பாகன்கள்

ஏகப்பட்ட பாகன்கள்

இப்படியே 4 மணி நேரம் ஓடிவிட்டது.. பெரும்போராட்டத்திற்கு பிறகு, மிரண்டோடிய யானையின் அதன் பாகன்களான வாசு, பிரசாத்தும் கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை.. பிறகு, மற்ற யானை பாகன்களையும் ஸ்பாட்டுக்கு வரவழைத்தனர்.. அவர்களின் உதவியோடு யானைகளை கட்டுப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.. இறுதியில், எல்லா பாகன்களும் ஒருங்கிணைந்து, யானைகளை சங்கிலியால் பிணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதாவது, பாகன்கள் சமயோசிதமாக செயல்பட்டு, யானைகளை ஒருசேர அடக்கி, பக்கத்தில் இருந்த தூணில் கட்டியிருக்கிறார்கள்.. இல்லாவிட்டால் யானைகளை அடக்கி இருக்க முடியாதாம்.

 மிரண்டு மிரண்டு

மிரண்டு மிரண்டு

அதற்கு பிறகுதான் இயல்பு நிலை திரும்பி உள்ளது.. பொதுமக்களும், பக்தர்களும் நிம்மதியடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வடக்கஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்... இந்த திருவிழாவுக்காகவே ஸ்பெஷலாக கொண்டுவரப்பட்டதாம்.. ஒரு யானை மிரண்டதால்தான் இன்னொரு யானையும் மிரண்டதாக சொல்கிறார்கள்.. மிரண்ட யானை தேவிநந்தன், தன்னுடய தந்தங்களால் இன்னொரு யானையை கொடூரமாக தாக்கும் காட்சிகளும் வெளியாகி தற்போது இணையத்தில் பதைபதைப்பை ஏற்படுத்தி வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+