கேரளாவில் நேற்று 7 பேருக்கு மட்டும் கொரோனா - மருத்துவமனையில் 27 பேருக்கு சிகிச்சை
திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று 7 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் சைலஜா வெளியிட்ட அறிக்கை:
கேரளாவில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த 4 பேருக்கும், பாலக்காடு, மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவருக்கும் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா எப்படி வந்தது?
காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும் சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் ஆவர். பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் சென்னையில் இருந்தும், மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் குவைத்திலிருந்தும் வந்தவர்கள் ஆவர். வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவியுள்ளது. கேரளாவில் நேற்று யாருக்கும் நோய் குணமாகவில்லை.

பாதிப்பு எண்ணிக்கை 519
இதுவரை கேரளாவில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 519 ஆகும். 489 பேர் இதுவரை குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். தற்போது 27 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 1307 பேர் வெளிநாடுகளில் இருந்து கேரளா வந்துள்ளனர். இவர்களில் 650 பேர் வீடுகளிலும், 641 பேர் கொரோனா முகாம்களிலும், 16 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 229 பேர் கர்ப்பிணிகள் ஆவர்.

கண்காணிப்பில் 27, 986 பேர்
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் 27, 986 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 27,545 பேர் வீடுகளிலும், 441 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். கொரோனா அறிகுறிகளுடன் மொத்தம் 157 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 37, 858 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் 37,098 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது.
Recommended Video

புதியதாக நோய் தீவிரப் பகுதி
இதுதவிர வெளிமாநில தொழிலாளர்கள், சுகாதாரத்துறையினர் மற்றும் சமூக நெருக்கம் அதிகமுள்ள 3,842 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் 3,791 பேருக்கு நோய் இல்லை என்று தெரியவந்துள்ளது. கேரளாவில் புதிதாக நோய் தீவிரமுள்ள ஒரு பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள நென்மேனி என்ற இடம் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து நோய் தீவிரம் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications