"ராஜி.. ராஜி".. 71 வயசு தாத்தாவுக்கு வந்த சபலம்.. பியூட்டி பார்லர் லேடியாம்.. கடைசியில் மானமே போச்சு
71 வயது நபரை மிரட்டி பணம் பறித்த பெண்ணை கேரள போலீசார் கைது செய்தனர்
திருவனந்தபுரம்: ராஜி மாதிரி பெண்கள் ஆபத்தானவர்கள்.. ஆனால், இவர்களை போன்றவர்கள் மக்களோடு மக்களாகவே கலந்திருப்பதால், யாராலும் எளிதில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட முடிவதில்லை.. அதனால்தான், இதுபோன்ற பெண்களால் பாதிக்கப்படுவோர்களின் லிஸ்ட்கள் அதிகமாகி கொண்டே போகிறது.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர்தான் இந்த ராஜி... எருமப்பட்டி - திப்பிலசேரி பகுதியில் வசித்து வருகிறார்.. 35 வயதாகிறது..
குந்நங்குளம் என்ற பகுதியில் பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார்... இவருக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள் உண்டு..

பியூட்டி பார்லர்
அதில் ஒரு ஆண் நண்பர் மூலம், ஒரு தாத்தா நட்பாகி உள்ளார்.. அந்த தாத்தாவுக்கு 71 வயதாகிறது.. சாவக்காடு பகுதியை சேர்ந்தவர்.. ரொம்ப வசதியானவராம்.. 20 வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.. இவரிடம் ராஜி மிகவும் நெருக்கமாகி உள்ளார்.. ஒருகட்டத்தில் ராஜியின் பியூட்டி பார்லர் ரூமிலேயே இருவரும் தனிமையாக இருந்து வந்துள்ளனர்..

பியூட்டி பார்லர்ரூம்
உல்லாசமாக இருக்கும்போது, அந்த போட்டோக்களை ராஜி தன்னுடைய செல்போனில் எடுத்து கொள்வாராம்.. இதற்கு பிறகு, அந்த நிர்வாண போட்டோக்களை, தாத்தாவிடமே காண்பித்து, பணமிரட்டல் விடுத்துள்ளார்.. 50 லட்சம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.. இல்லாவிட்டால், போட்டோ, வீடியோக்களை, சொந்தக்காரர்கள், சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிடுவதாக மிரட்டி உள்ளார்.. இதனால் தாத்தா நடுநடுங்கி போய்விட்டார்.. 50 லட்சம் மொத்தமாக தர முடியாத சூழலில் இருந்ததால், கொஞ்சம் கொஞ்சமாக பணம் தந்துள்ளார்..

ராஜி.. ராஜி..
3 லட்சம் ரூபாய் வரை ராஜி பறித்துள்ளார்.. ஆனால், அதற்குமேல் பொறுமை இழந்த தாத்தா, நேரடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கே சென்றுவிட்டார்.. குந்நங்குளம் போலீசில் நடந்ததையெல்லாம் சொல்லி புகார் அளித்துள்ளார்.. இதையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் ராஜியை கைது செய்தனர்... விசாரணையும் துவங்கினர்.. பணத்திற்காக இதுபோன்ற வசதியானவர்களுக்கு வலையை விரிப்பதும், சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவர்களிடம் நெருங்கி பழகி, பின்பு மிரட்டி பணம் பறிப்பதும் என வாடிக்கையாக இருந்துள்ளார்.

ஆண் நண்பர்
இதற்கு உதவியாக ஆண் நண்பர் ஒருவரும் இருந்துள்ளார்.. யாரெல்லாம் வசதியானவர்கள், சபலபுத்தி உடையவர்கள் என்பதை நோட்டமிட்டு, அவர்களை பற்றி தகவலை ராஜியிடம் சொல்வாராம் இந்த நண்பர்.. பிறகு ஒருநாள் ராஜியை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியும் வைப்பாராம்.. அந்தவகையில், இவர்தான் அனைத்துக்கும் காரணமாக இருந்துவந்ததால், போலீசார் இவரை கைது செய்ய மும்முரமாகி உள்ளனர்.. ஆனால், அதற்குள் இவர் தலைமறைவாகிவிட்டதால் வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள். இந்த முதியவரைப் போன்று வேறு யாரிடம் எல்லாம் ராஜி பணம் பறித்து ஏமாற்றியுள்ளார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications