13 பேர் உடல் சிதறி பலி.. கேரளா திரிச்சூரில் பயங்கரமாக வெடித்து சிதறிய பட்டாசு ஆலை.. பலர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திரிச்சூரில் பூரம் விழாவையொட்டி பட்டாசு தயாரிக்கப்பட்ட இடத்தில் இன்று திடீரென்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 24 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 5 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

firecracker factory blast in Kerala Thrissur

கேரளா மாநிலத்தில் பூரம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பூரம் விழாவையொட்டி திரிச்சூர் மாவட்டம் முண்டதிகோட் பகுதியில் பட்டாசு சேமிப்பு குடோன் உள்ளது. இந்த குடோனில் இன்று பட்டாசு தயாரிப்பு பணி நடந்தது.

திருவாம்படி தேவசாமிற்காக அவர்கள் பட்டாசு தயாரித்தனர். சுமார் 30க்கும் அதிகமானவர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தான் திடீரென்று பட்டாசுகள் வெடித்து சிதறின. இதுபற்றி பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் காயமடைந்து துடிதுடித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் கேரளா தீயணைப்பு வீரர்கள், கேரளா மாநில பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பற்றி எரிந்த பட்டாசு குடோனை தண்ணீர் விட்டு அணைத்தனர். அதன்பிறகு மீட்பு பணி தொடங்கியது. மொத்தம் 13 பேர் பலியாகி உள்ளனர். இதுதவிர 24 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் 17 பேர் லேசான காயமடைந்துள்ளனர். அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை. அதேவேளையில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்து 24 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிரமாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+