விடாமல் துரத்தும் யானை தந்தம் வழக்கு.. நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் மலையாள நடிகர் மோகன்லால்!
திருவனந்தபுரம்: யானை தந்தம் வைத்திருந்த வழக்கில் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் மலையாள நடிகர் மோகன்லால் ஆஜராகிறார். இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனையடுத்து இன்று அவர் ஆஜராகிறார்.
கேரளாவில் நடிகர் மோகன்லாலுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் கடந்த 2012ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போதுதான் யானை தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை அனைத்தும் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வனத்துறை, மோகன்லாலுக்கு யானை தந்தம் கொடுத்ததாக திருச்சூரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கு பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அப்போதிருந்த அமைச்சரிடத்தில் மோகன்லால் யானை தந்தம் குறித்து கோரிக்கையை வைத்திருந்தார். எனவே சட்ட விதிகள் திருத்தப்பட்டு தந்தம் மீண்டும் மோகன்லால் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் வனத்துறையும் இந்த வழக்கிலிருந்து விலகியது. இப்படி இருக்கையில் பவுலோஸ் என்பவர் பெரும்பாவூர் நீதிமன்றத்தில், யானை தந்தம் மோகன்லால் வசம் ஒப்படைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்போதுதான், தன்னிடம் இருக்கும் யானை தந்தத்திற்கு உரிய அனுமதி இருக்கிறது. தந்த்திற்காக எந்த யானையும் கொல்லப்படவில்லை, இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று மோகன்லால் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து அவர் கேரள உயர்நீதிமன்றத்தை நாடினார். அங்கும், மேற்குறிப்பிட்ட காரணத்தை கூறி வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால் இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கை மீண்டும் விசாரித்த பெரும்பாவூர் நீதிமன்றம், இன்று விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என மோகன்லாலுக்கு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications