என்னை கொல்ல பார்க்கிறாங்க.. அந்த விஐபி பெயரை விரைவில் வெளியிடுவேன்.. சரிதா நாயர் பகீர்
விஷம் வைத்து தன்னை கொல்ல முயன்றதாக சரிதா நாயர் தெரிவித்துள்ளார்
திருவனந்தபுரம்: கேரளாவின் சரிதா நாயர் திடீரென ஒரு பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.. தன்னை யாரோ கொலை செய்ய முயற்சித்ததாக இவர் தெரிவித்துள்ளதையடுத்து அம்மாநிலத்தில் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.
கேரளாவின் முன்னாள் முதல்வர் காங்கிரசைச் சேர்ந்தவர் உம்மன்சாண்டி... இவர்மீதும், அப்போதைய அமைச்சர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டை நடிகை சரிதா நாயர் கூறியிருந்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...
இதுதொடர்பான போட்டோக்களும் வீடியோக்களும் அந்நாட்களில் வெளியாகி மீடியாவில் முக்கிய இடத்தை பெற்று வந்தன. இந்த வழக்கு விசாரணை பல வருட காலம் கேரளாவில் நடந்து வருகிறது.. தற்போதும் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

நிலுவை
இதைதவிர, சரிதா நாயர் மீது ஏராளமான வழக்குகள் பல போலீஸ் ஸ்டேஷனில் உள்ளது.. தமிழ்நாட்டில்கூட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, சூரிய மின்சக்தி வசதி செய்து தருவதாகக் கூறி சோலார் பேனல் எனப்படும் சூரியஒளி தகடுகள் அமைத்துத் தரும் நிறுவனத்தின் இயக்குநராக இருந்து பல நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சோலார்
இது தொடர்பாக சரிதா நாயர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கோழிக்கோடைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்பவர் 2012-ல் போலீஸில் அளித்த புகாரில் சரிதா நாயர் மற்றும் பிஜூ ராதாகிருஷ்ணன் ஆகியோர் சோலார் பேனல் வசதி செய்து தருவதாக கூறி ரூ.42.70 லட்சம் பெற்றதாகவும் ஆனால், சொன்னபடி செய்யாததோடு பணத்தையும் திருப்பித் தரவில்லை என்றும் புகார் தெரிவித்தார். இது தொடர்பான வழக்கு கோழிக்கோடு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு சரிதா நாயர் பல முறை ஆஜராகவில்லை.

வழக்கு
இந்த வழக்கு கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.. இந்த வழக்கில் சரிதா நாயர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. இந்நிலையில், இவரது இன்னொரு வழக்கு கொட்டாரக்கரை கோர்ட்டில் நடந்து வருகிறது.. அதாவது, கடந்த 2015ல், கொட்டாரக்கரை அருகே காரில் சென்று கொண்டிருந்தார் சரிதா நாயர்.. அப்போது, நடுராத்திரி அவரது காரை ஒரு கும்பல் வழிமறித்து, சரிதா நாயகரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.. இதுதொடர்பான வழக்கு விசாரணையும் கோர்ட்டில் நடந்து வருகிறது.

விசாரணை
நேற்றும் விசாரணை நடந்த நிலையில், சரிதாநாயர் கோர்ட்டில் ஆஜாரானர். அப்போது திடீரென ஒரு குற்றச்சாட்டை கூறினார்.. அவர் சொன்னதாவது: "எனக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி நடந்தது.. இதனாலேயே எனக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. பிறகு வேலூர், திருவனந்தபுரத்தில் இதற்காகவே சிகிச்சை பெற்று வருகிறேன். உடல்நிலை தேறியதும் எனக்கு விஷம் தந்தது யார் என்பதை வெளிப்படையாக தெரிவிப்பேன் என்றார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications