கேரளா: மாவோயிஸ்டுகள்- போலீசார் இடையே கடும் துப்பாக்கி சண்டை- 2 பேர் சிக்கினர்- தப்பிய 3 பேர் எங்கே?
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாடு வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் மாநில போலீசாருக்கும் இடையே நேற்று இரவு கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த மோதலின் போது 2 மாவோயிஸ்டுகள் சிக்கினர். தப்பி ஓடிய மேலும் 3 தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மாவோயிஸ்டுகள் செல்வாக்கு உள்ள பகுதிகளில் இந்த வாக்குப் பதிவு நடைபெற்றது. மாவோயிஸ்டுகளின் கடும் தாக்குதல்களை மீறி சுமார் 70%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. மேலும் சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுக்கும் துணை ராணுவத்தினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் துணை ராணுவத்தினர் 3 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் கேரளா மாநில வயநாடு பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் தலப்புழா காவல்நிலை எல்லைகுட்பட்ட வனப்பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அப்போது வனப்பகுதியில் மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து போலீசாரும் பதிலடி கொடுத்தனர். இந்த மோதல் சுமார் 30 நிமிடங்கள் நீடித்தன. வயநாடு வனப்பகுதியில் போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே 4-வது முறையாக துப்பாக்கி சண்டை நிகழ்ந்துள்ளது.
இந்த மோதலின் போது 2 மாவோயிஸ்டு தீவிரவாதிகள் சிக்கினர். மேலும் 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். தப்பி ஓடிய 3 மாவோயிஸ்டுகளை தேடும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக கேரளா போலீசார் தெரிவித்தனர்.
கோழிக்கோட்டில் மாவோயிஸ்டுகளுக்கு உதவிய சிலரை முதலில் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்தான் வயநாடு வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பது உறுதியானது. இதனையடுத்து கோழிக்கோட்டில் சிக்கிய நபர்களுடன் வயநாடு சென்று போலீசார் மாவோயிஸ்டுகள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போதுதான் மாவோயிஸ்டுகளுடன் பயங்கர மோதல் ஏற்பட்டது என விவரிக்கின்றனர் கேரளா போலீசார்.
தப்பி ஓடிய மாவோயிஸ்டுகள் தமிழ்நாட்டு வனப்பகுதிக்குள் தப்பி இருக்கக் கூடும் என்பதால் தமிழக போலீசாருக்கும் கேரளா போலீசார் தகவல் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications