ஆயுஷ் செயலாளரை நீக்குங்கள்.. தமிழக அதிகாரிக்கு அங்கு போஸ்டிங் போடுங்கள்.. சசி தரூர் அதிரடி!
திருவனந்தபுரம்: இந்தி தெரியாத தமிழ் மருத்துவர்களை வெளியேறும்படி கூறிய ஆயுஷ் அமைச்சக செயலாளரை மாற்றிவிட்டு அந்த இடத்தில் தமிழக சிவில் சர்வண்ட் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
'ஆயுஷ்' அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட மருத்துவர்களுக்கான இணையவழிப் பயிற்சி முகாமில் ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்யா ராஜேஷ் கோட்சே இந்தியில் வகுப்புகளை நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசியல் தலைவர்கள் உட்பட நாடு முழுக்க பல்வேறு அரசியல் தலைவர்கள் இவருக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த மீட்டிங்கில் கலந்து கொண்டு தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவை சேர்ந்த மருத்துவர்கள் கோட்சேவிடம் ஆங்கிலத்தில் பேசும்படி கூறியுள்ளனர். இதற்கு கோட்சே கோபமாக, ஆங்கிலம் எனக்கு சரியாக தெரியாது, இந்தியில்தான் பேசுவேன், கேட்க முடியாது என்றால் மீட்டிங்கில் இருந்து கிளம்புங்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்

இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டில், மத்திய அரசின் செயலாளர் ஒருவர் அரசு வீடியோ கருத்தரங்கில் இந்தி புரியாத தமிழர்களை வெளியேறும்படி கூறியது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த அரசுக்கு கொஞ்சமாவது கண்ணியம் இருந்தால், அந்த செயலாளரை பணியில் இருந்து நீக்கிவிட்டு, அந்த இடத்தில் ஒரு தமிழ் சிவில் சர்வன்ட் பணியாளரை பணியில் அமர்த்த வேண்டும்.
கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்ட இந்தியாவின் ஒற்றுமையை ஆட்சியில் இருந்து வன்முறையாளர்கள் கூட்டம் (tukde -tukde gang) காலி செய்ய பார்க்கிறதா?, என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications