கொரோனா தொல்லையே தாங்கல.. பறவைக் காய்ச்சலும் பரவுதாம்.. அப்போ, சன்டே சிக்கன் இல்லையா?
திருவனந்தபுரம்: ஒரு பக்கம் கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் நோய் தாக்கம் ஏற்பட்டு அது உலகின் பல நாடுகளுக்கும் பரவியது. இந்தியாவைப் பொருத்த அளவில் இதுவரை 31 பேர் அதற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் முதன் முதலில் இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் கேரளாவில் தான் கண்டறியப்பட்டனர்.
அந்த இரண்டு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு பிறகு அவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருபக்கம் வைரசுக்கு எதிராக பல்வேறு முன்னெச்சரிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. டெல்லி உள்பட பல பகுதிகளில் பள்ளிகளுக்கு கூட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கோழிக்கோடு
இந்த நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பகுதியிலுள்ள ஒரு கோழிப்பண்ணையில் Bird flu எனப்படும் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அந்த மாநில கால்நடை பராமரிப்புத்துறை உறுதிசெய்துள்ளது. பறவைக்காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக அத்துறை அமைச்சர் ராஜு தெரிவித்துள்ளார்.

ரத்த மாதிரி
இருப்பினும் மாநிலம் முழுக்க உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு கேரளாவில் பறவை காய்ச்சல் ஏற்பட்டது. அது மனிதர்களுக்கும் பரவியது. இதன் பிறகு தற்போது மீண்டும் அது போன்ற ஒரு காய்ச்சல் அந்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த கோழிப்பண்ணையில், தினமும் சுமார் 200 கோழிகள் மரணமடைந்ததை தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் அவற்றின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பறவை காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.

போபால்
கால்நடை பராமரிப்பு துறை அலுவலர் சிந்து நிருபர்களிடம் கூறுகையில், கடந்த வியாழக்கிழமை இந்த கோழிப்பண்ணையில் நடைபெற்ற கோழிகளின் மரணம் தொடர்பாக எங்களுக்கு தகவல் கிடைத்ததையடுத்து அவற்றின் ரத்த மாதிரிகள் கண்ணூர் பரிசோதனை மையத்துக்கும், மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பரிசோதனை மையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டன என்றார்.
Recommended Video

நாளைக்கு சன்டே
பரிசோதனைகளில், குறிப்பிட்ட பண்ணையில் பறவை காய்ச்சல் ஏற்பட்டது தெரியவந்தது, என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததில் இருந்து, கேரளாவில் சிக்கன் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. நாளை சன்டே என்பதால், சிக்கன் பிரியர்கள் கவலையடைந்துள்ளனர். தமிழக எல்லைகளில் கேரளாவிலிருந்து வரும் சிக்கன் வாகனங்களுக்கு மருந்து தெளிப்பு பணிகளை துவக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications