2ம் அலை.. அதிர்ச்சி அடைய வைத்த கேரளா.. ஒரே நாளில் இத்தனை கொரோனா கேஸ்களா? எங்கே சொதப்பியது?
கேரளாவில் இன்று ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அம்மாநில மக்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்ட மாநிலம் என்றால் கேரளாதான் என்று கண்ணை மூடிக்கொண்டு கூறலாம். அங்குதான் முதலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் கொரோனாவை கேரளா தீவிரமாக கட்டுப்படுத்தியது.
1000 கேஸ்கள் கூட தொடாமல் மிக கட்டுப்பாட்டுடன் கேரளா கொரோனாவை கட்டுப்படுத்தியது. உலகம் முழுக்க இருக்கும் பல்வேறு நாடுகள் கேரளாவின் இந்த சிறப்பான செயலை பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

மீண்டும் கேஸ்கள்
இந்த நிலையில் அங்கு தற்போது மீண்டும் கொரோனா கேஸ்கள் வர தொடங்கி உள்ளது. கேரளாவில் இப்படி மீண்டும் கொரோனா கேஸ்கள் ஏற்படுவது செகண்ட் வேவ் தாக்குதலாக இருக்கும் என்று கூறுகிறார்கள். ஒரு வைரஸ் உருவாகி, அது கட்டுப்படுத்தப்பட்டு பின் அந்த வைரஸ் மீண்டும் தோன்றினால் அதுதான் செகண்ட் வேவ். செகண்ட் வேவ் ஏற்பட்டால் பொதுவாக முன்பை விட கொரோனா வைரஸ் அதிக வீரியமாக இருக்கும்.

அச்சம் அதிகரிப்பு
இதனால் பலர் முன்பை விட அதிகமாக பாதிக்க வாய்ப்புள்ளது, என்கிறார்கள். தற்போது கேரளாவில் இதே தாக்குதல் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். கடந்த ஒரு வாரமாக அங்கு தினமும் 20க்கும் அதிகமாக கேஸ்கள் வர தொடங்கி உள்ளது. கேரளாவில் இன்று ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அம்மாநில மக்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எங்கிருந்து வந்தனர்
இதில் 18 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 31 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் இப்படி வெளி மாநிலங்களில் இருந்து வந்த மக்கள் காரணமாக பலருக்கு கொரோனா ஏற்பட தொடங்கி உள்ளது. இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் 7 சுகாதார பணியாளர்கள் உட்பட 13 பேர் மாநிலத்திற்குள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவே முதல்முறை
கேரளாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நாளில் இருந்து ஒரே நாளில் இத்தனை கேஸ்கள் ஏற்படுவது இதுதான் முதல் முறை. கேரளாவில் மொத்தம் 794 பேருக்கு கொரோனா உள்ளது. அங்கு 275 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளது. இன்று 3 பேர் குணமாகி உள்ளனர். மொத்தமாக 515 பேர் குணமாகி உள்ளனர். அங்கு மொத்தம் இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன பேட்டி
இன்று பாலக்காட்டில் அதிகமாக 19 பேருக்கும், கண்ணூரில் 16 பேருக்கும் கொரோனா வந்தது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அளித்துள்ள பேட்டியில், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வரும் நபர்கள் மூலம் இப்படி கொரோனா கேஸ்கள் அதிகம் வருகிறது. இது எதிர்பார்த்ததுதான். மக்கள் எங்களுக்கு முழுமையாக ஒத்துழைத்தால் கண்டிப்பாக கொரோனாவை விரட்ட முடியும், என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications