கோச் டூ பக்கத்து வீட்டுக்காரர் வரை.. தலித் சிறுமியை பலாத்காரம் செய்த 64 பேர்.. கேரளாவில் கொடுமை
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் சிறுமி ஒருவர் கடந்த 5 ஆண்டுகளாக கோச் முதல் பக்கத்து வீட்டுக்காரர்கள் வரை மொத்தம் 64 பேர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறியுள்ள சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் முதற்கட்டமாக 6 பேரை கைது செய்துள்ளனர்.
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் 18 வயதை எட்டினார். அதற்கு முன்பு சிறுமியாக இருந்தார். இந்நிலையில் தான் மகிளா சமக்யா எனும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இளம்பெண் வசிக்கும் பகுதிக்கு சென்று ஃபீல்ட் விசிட் செய்தனர்.

அப்போது இளம்பெண்ணை சந்தித்து தொண்டு நிறுவனத்தினர் சந்தித்து பேசினர். அப்போது இளம்பெண்ணின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மாவட்ட குழந்தைகள் நல கமிட்டியிடம் அழைத்து சென்றனர்.
குழந்தைகள் நல கமிட்டியில் உள்ளவர்கள் இளம்பெண்ணுக்கு கவுன்சிலிங் கொடுத்தனர். மனநல நிபுணர் அவரிடம் பேசி தைரியம் வழங்கினார். இந்த கவுன்சிலிங்கின்போது அவர் கூறிய தகவல் திடுக்கிட வைத்தது. அதாவது தலித் சமுதாயத்தை சேர்ந்த அந்த பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக 64 பேர் மிரட்டி பாலியல் தொல்லை தந்துள்ளதாக அழுதபடி கூறினார். தனக்கு 13 வயது நிரம்பியதில் இருந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆபாசபடங்களை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கண்ணீருடன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட இளம்பெண் பள்ளியில் படிக்கும்போது ஸ்போர்ட்ஸில் இருந்துள்ளார். இதனால் பொதுவெளியிலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், உள்ளூர்காரர்கள் என்று பலரும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ந்து போன குழந்தைகள் நல கமிட்டி உடனடியாக பத்தனம்திட்டா போலீசில் புகார் அளித்தது. பத்தனம்திட்டா குழந்தைகள் நல கமிட்டியின் மாவட்ட தலைவர் ராஜீவ் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மொத்தம் 4 வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்தனர். பாதிக்கப்பட்டவர் தற்போது 18 வயது நிரம்பி இளம்பெண்ணாக இருந்தாலும் கூட அவருக்கு நேர்ந்த கொடுமையின்போது சிறுமியாக இருந்தார். இதனால் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் இதையடுத்து உடனடியாக விசாரணை தீவிரப்படுத்திய போலீசார் 10 பேரை பிடித்து விசாரித்தனர். அதன்பிறகு 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் ஏற்கனவே சிறையில் உள்ள நிலையில் மற்ற 5 பேர் புதிதாக கைது செய்யப்பட்டனர். இதுபற்றி பத்தனம்திட்டா குழந்தைகள் நல கமிட்டியின் மாவட்ட தலைவர் ராஜீவ் கூறுகையில், ‛‛இந்த வழக்கு என்பது ரொம்ப சீரியஸானது. சிறுமி 8 ம் வகுப்பு படிக்கும்போதே பாலியல் தொல்லைக்கு ஆளாகி உள்ளார். சிறுமி விளையாட்டில் மிகவும் ஆர்வமாக கொண்டவர். பொது வெளியில் வைத்தும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது'' என்று வேதனைப்பட்டார். இந்த சம்பவம் கேரளாவை அதிர வைத்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications