சபரிமலைக்கு போறீங்களா? இருமுடி கட்டில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீரை தவிர்க்க வேண்டும்: தேவசம்போர்டு
திருவனந்தபுரம்: ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் 70 ஆயிரம் பேர்களும், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேர்களும் என தினமும் மொத்தம் 80 ஆயிரம் பக்தர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்திருக்கிறது.. அதேபோல, சபரிமலை வரும் பக்தர்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை திருவிதாங்கூர் தேவசம் போர்டு விடுத்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கமாகும்.. இந்த பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தேவசம் போர்டு மேற்கொண்டு வருகிறது.

மண்டல பூஜை: அந்தவகையில், இந்த வருடத்துக்கான மண்டல பூஜை வரும் டிசம்பர் 26-ந்தேதி நடைபெறுகிறது.. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 15-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது.. எனவே, பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலில் அவர்கள் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகவும், சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு புதிய நடைமுறைகள் கடைபிடிக்கப்பட உள்ளன.
அதன்படி "ஆன்லைன்" முன்பதிவு அடிப்படையில் 70 ஆயிரம் பேர்களும், "ஸ்பாட் புக்கிங்" மூலம் 10 ஆயிரம் பேர்களும் என மொத்தம் 80 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தினமும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
ஸ்பாட் புக்கிங்: இதில், ஸ்பாட் புக்கிங் செய்யும் பக்தர்களுக்கு பம்பை, எருமேலி, பர்மேடு ஆகிய 3 இடங்களில் கவுண்டர்கள் திறக்கப்படும் என்று தேவசம்போர்டு தெரிவித்திருக்கிறது.. இதில் பக்தர்களின் விவரங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளும் வகையில் 'கியூ-ஆர் கோர்டு' மற்றும் போட்டோ அடங்கிய பாஸ் வழங்கப்படுகிறது. முன்பதிவு செய்ய முடியாமல் ஸ்பாட் புக்கிங் செய்து வரும் பக்தர்கள், கட்டாயமாக ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
அதேபோல, மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் இந்த கவுண்டர்களின் எண்ணிக்கையும் 6 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. இந்நிலையில், பக்தர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை தேவசம்போர்டு அறிவித்திருக்கிறது..
தேங்காய் : நெய் தேங்காய், தேங்காய், அரிசி, பன்னீர், சாம்பிராணி, கற்பூரம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை இருமுடி கட்டில் வைத்து பக்தர்கள் தலையில் ஏந்தி வருவார்கள். இதில் மீதமாகும் சாம்பிராணி, பன்னீர், கற்பூரம், மஞ்சள் போன்ற பொருள்கள் மாளிகைப்புறம் கோவில் அருகே பக்தர்கள் விட்டு சென்றுவிடுகிறார்களாம்.
இவற்றை பூஜைக்கும் பயன்படுத்த முடியாது என்பதால், பக்தர்கள் இந்த பொருட்களை எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும் என்று ஏற்கனவே தந்திரி, மேல் சாந்தி போன்றோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனாலும், பக்தர்கள் இந்த தொடர்ந்து எடுத்து வருவதுடன், மாளிகைப்புறம் அருகே போட்டுவிடுகிறார்களாம்.. இந்த பொருட்களை, கனரக இயந்திரங்கள் மூலம் எடுத்துச்சென்று, காட்டுப்பகுதியில் எரிக்கப்படுகின்றன.
வேண்டுகோள்: அதனால், மீண்டும் தேவசம் போர்டு பக்தர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.. அதன்படி, இருமுடியில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் போன்ற பொருட்களை எடுத்து வர வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.
அதுமட்டுமல்ல, கற்பூரம், சாம்பிராணி போன்றவை பூஜை பொருட்களாக இருந்தாலும், தீ ஆபத்தை கருத்தில் கொண்டு அவற்றை எரிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications