சபரிமலைக்கு போறீங்களா? இருமுடி கட்டில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீரை தவிர்க்க வேண்டும்: தேவசம்போர்டு
திருவனந்தபுரம்: ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் 70 ஆயிரம் பேர்களும், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேர்களும் என தினமும் மொத்தம் 80 ஆயிரம் பக்தர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்திருக்கிறது.. அதேபோல, சபரிமலை வரும் பக்தர்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை திருவிதாங்கூர் தேவசம் போர்டு விடுத்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கமாகும்.. இந்த பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தேவசம் போர்டு மேற்கொண்டு வருகிறது.

மண்டல பூஜை: அந்தவகையில், இந்த வருடத்துக்கான மண்டல பூஜை வரும் டிசம்பர் 26-ந்தேதி நடைபெறுகிறது.. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 15-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது.. எனவே, பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலில் அவர்கள் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகவும், சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு புதிய நடைமுறைகள் கடைபிடிக்கப்பட உள்ளன.
அதன்படி "ஆன்லைன்" முன்பதிவு அடிப்படையில் 70 ஆயிரம் பேர்களும், "ஸ்பாட் புக்கிங்" மூலம் 10 ஆயிரம் பேர்களும் என மொத்தம் 80 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தினமும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
ஸ்பாட் புக்கிங்: இதில், ஸ்பாட் புக்கிங் செய்யும் பக்தர்களுக்கு பம்பை, எருமேலி, பர்மேடு ஆகிய 3 இடங்களில் கவுண்டர்கள் திறக்கப்படும் என்று தேவசம்போர்டு தெரிவித்திருக்கிறது.. இதில் பக்தர்களின் விவரங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளும் வகையில் 'கியூ-ஆர் கோர்டு' மற்றும் போட்டோ அடங்கிய பாஸ் வழங்கப்படுகிறது. முன்பதிவு செய்ய முடியாமல் ஸ்பாட் புக்கிங் செய்து வரும் பக்தர்கள், கட்டாயமாக ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
அதேபோல, மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் இந்த கவுண்டர்களின் எண்ணிக்கையும் 6 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. இந்நிலையில், பக்தர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை தேவசம்போர்டு அறிவித்திருக்கிறது..
தேங்காய் : நெய் தேங்காய், தேங்காய், அரிசி, பன்னீர், சாம்பிராணி, கற்பூரம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை இருமுடி கட்டில் வைத்து பக்தர்கள் தலையில் ஏந்தி வருவார்கள். இதில் மீதமாகும் சாம்பிராணி, பன்னீர், கற்பூரம், மஞ்சள் போன்ற பொருள்கள் மாளிகைப்புறம் கோவில் அருகே பக்தர்கள் விட்டு சென்றுவிடுகிறார்களாம்.
இவற்றை பூஜைக்கும் பயன்படுத்த முடியாது என்பதால், பக்தர்கள் இந்த பொருட்களை எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும் என்று ஏற்கனவே தந்திரி, மேல் சாந்தி போன்றோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனாலும், பக்தர்கள் இந்த தொடர்ந்து எடுத்து வருவதுடன், மாளிகைப்புறம் அருகே போட்டுவிடுகிறார்களாம்.. இந்த பொருட்களை, கனரக இயந்திரங்கள் மூலம் எடுத்துச்சென்று, காட்டுப்பகுதியில் எரிக்கப்படுகின்றன.
வேண்டுகோள்: அதனால், மீண்டும் தேவசம் போர்டு பக்தர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.. அதன்படி, இருமுடியில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் போன்ற பொருட்களை எடுத்து வர வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.
அதுமட்டுமல்ல, கற்பூரம், சாம்பிராணி போன்றவை பூஜை பொருட்களாக இருந்தாலும், தீ ஆபத்தை கருத்தில் கொண்டு அவற்றை எரிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications