கேரளா, மகாராஷ்டிராவில் கொட்டும் மழை.. மக்கள் முடக்கம்.. சில இடங்களில் வாக்குப்பதிவு பாதிப்பு!
மழை காரணமாக மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் வாக்குப்பதிவு பாதிப்படைய வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
Recommended Video
திருவனந்தபுரம்: மழை காரணமாக மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் வாக்குப்பதிவு பாதிப்படைய வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
கடந்த இரண்டு நாட்களாக கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் இன்று இரண்டு மாநில சட்டசபை தேர்தல் மற்றும் 51 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. தமிழகத்தில் உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

கேரளா எப்படி
கேரளாவில் இன்று 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. வட்டியூர்க்காவு, அரூர், கொன்னி, எர்ணாகுளம், மஞ்சேஸ்வரம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. ஆனால் அங்கு பெய்து வரும் மழை காரணமாக வாக்குப்பதிவு பாதிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

நல்ல மழை
இங்கு மொத்தம் 9.57 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். கேரளாவில் காலையில் இருந்து நன்றாக மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், பாலக்காடு, ஆலப்புழாவில் மழை பெய்து வருகிறது.

என்ன பாதிப்பு
சரியாக தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் எல்லாம் மழை பெய்வதால், வாக்கு பதிவு பாதிப்படைந்துள்ளது. அதேபோல் மஹாராஷ்டிராவில் சங்லி, நாசிக், புனே, ரத்னகிரி, அவுரங்காபாத் ஆகிய இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.

மதியம் எப்படி
இன்று மதியத்திற்கு பிறகு அங்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் தற்போது தமிழகத்திலும் மழை பெய்து வருகிறது. தேர்தல் நடக்கும் நாங்குநேரி தொகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. மழைக்கு இடையிலும் மக்கள் வாக்களித்து வருகிறார்கள்.

ஆனால் கனமழை
ஆனால் கேரளா, மஹாராஷ்டிராவில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு பாதிப்படைய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications