அதிரும் மலையாள சினிமா.. இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததாக புகார்.. நிவின் பாலி பரபர விளக்கம்
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி மீது பெண் ஒருவர் அளித்த பாலியல் புகார் பெரும் பரபரப்பைக் கிளப்பிய இருந்த நிலையில், இது தொடர்பாக அவரே விளக்கமளித்துள்ளார். தன் மீதான பாலியல் புகார்கள் பொய்யாது என்று சொன்ன நிவின் பாலி, இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
கேரளாவில் கடந்த 2015இல் பிரபல நடிகை ஒருவர் ஓடும் காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற கேரள உயர் நீதிமன்றம் நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.
ஹேமா கமிட்டி ரிப்போர்ட்: இந்த ஹேமா கமிட்டி கேரள அரசிடம் சில ஆண்டுகளுக்கு முன்பே தனது ரிப்போர்ட்டை அளித்துவிட்டது. இருப்பினும், அதைக் கேரள அரசு வெளியிடாமல் இருந்து வந்தது. நீண்ட சட்ட போராட்டத்திற்குப் பின்னரே அந்த ரிப்போர்ட் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பல நடிகைகள் வெளிப்படையாக தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லை குறித்துப் பேசத் தொடங்கியுள்ளனர்.
வழக்குப்பதிவு: இதையடுத்து இது குறித்து விசாரிக்கக் கேரள அரசு சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்தது. இந்தச் சூழலில் நேரியமங்கலத்தை சேர்ந்த பெண் ஒருவர் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி மீது புகாரளித்திருந்தார். பட வாய்ப்பு அளிப்பதாகக் கூறி தன்னை துபாயில் வைத்து பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் எர்ணாகுளம் ஊன்னுக்கல் போலீசார் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
விளக்கம்: இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தன் மீதான பாலியல் புகார் குறித்து மலையாள நடிகர் நிவின் பாலி விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் தனது விளக்கத்தை அளித்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் பாலியல் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன் என்றும் நிவின் பாலி கூறியுள்ளார்.

சட்டப்பூர்வ நடவடிக்கை: இது தொடர்பாக அவர், "ஒரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகத் தவறான தகவல் பரவி வருகிறது.. இது முற்றிலும் பொய் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.. இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க நான் எந்த எல்லைக்கும் செல்வதில் உறுதியாக இருக்கிறேன். மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டோரை வெளிச்சத்திற்குக் கொண்டு வரத் தேவையான நடவடிக்கை எடுப்பேன். அக்கறைக்கு நன்றி. மற்ற விஷயங்களை சட்டப்பூர்வமாகக் கையாள்வேன்" என்று பதிவிட்டுள்ளார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications