பாஜக ஒரு சீட் கூட ஜெயிக்கலையே? கேள்வி கேட்ட பெண் நிருபரிடம் அத்துமீறிய ‛தீனா’ பட நடிகர் - வழக்கு
திருவனந்தபுரம்: மலையாள நடிகரும், பாஜகவின் முன்னாள் ராஜ்யசபா எம்பியுமான சுரேஷ் கோபி பத்திரிகையாளர் சந்திப்பின்போது பெண் பத்திரிகையாளரிடம் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் சுரேஷ் கோபி மன்னிப்பு கோரினார். இத்தகைய சூழலில் தற்போது அவர் மீது போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மலையாள சினிமாவில் மூத்த நடிகராக இருப்பவர் சுரேஷ் கோபி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக முன்னணி நடிகராக மாறினார். இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடா உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் நிரபராதி, நடிகர் அஜித்தின் தீனா, விக்ரமின் ஐ உள்ளிட்ட மேலும் சில படங்களிலும் அவர் நடித்துள்ளார். மேலும் அவர் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். பாஜகவில் ராஜ்யசபா எம்பியாக பொறுப்பு வகித்தார். தற்போது அவரது பதவிக்காலம் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் தான் கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் சுரேஷ் கோபி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்தார். அந்த சமயத்தில் அருகே நின்ற பெண் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛கேரளாவில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒரு இடங்களில் கூட வெற்றி பெற வில்லையே?'' என கேள்வி எழுப்பினார்.
அதற்கு சுரேஷ் கோபி, ‛‛நான் முயற்சி செய்கிறேன். பொறுத்திருந்து பாருங்கள்'' என பதிலளித்தபடிய அத்துமீறி நடந்து கொண்டார். அதாவது பெண் பத்திரிகையாளரின் தோளில் கை வைத்து பேசினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் பத்திரிகையாளர் அவரது கையை தட்டிவிட்டார். ஆனாலும் சுரேஷ் கோபி தனது செயலை மாற்றவில்லை. தொடர்ந்து பெண் பத்திரிகையாளரிடம் எல்லை மீறினார்.
இந்த சம்பவம் அனைத்தும் வீடியோவாக பதிவானது. இந்த வீடியோ டிவி சேனல்களில் வெளியானது. இதையடுத்து சுரேஷ் கோபிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து சுரேஷ் கோபி மன்னிப்பு கோரினார். இதுபற்றி அவர், ‛‛பெண் பத்திரிகையாளர் என் வழியை மறித்தார். இதனால் அவரை நகர்ந்து நிற்கும்படி கூற முயன்றேன்.இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்க பலமுறை அவரை தொடர்பு கொண்டேன். நான் ஒரு அப்பாவைபோல் அவரிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்'' என்றார்.
சுரேஷ் கோபி மன்னிப்பு கோரினாலும் கூட சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து கோழிக்கூடு போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து சுரேஷ் கோபி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications