Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுட சுட இட்லி தொண்டையில் சிக்கி.. அதுவும் மூணு.. மூச்சுவிட முடியாமல் திணறிய நபர்.. அப்பறம் என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: இட்லி சாப்பிட்ட லாரி டிரைவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை கேரளாவில் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. பண்டிகை நாளில் இப்படியொரு நிகழ்வு, பலருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கஞ்சிக்கோடு கொல்லப்புரா என்ற இடத்தில், இளைஞர் அமைப்பு ஒன்று செயல்பட்டு வருகிறது.. இந்த அமைப்பின் சார்பில் ஓணம் விழா நடத்தப்பட்டுள்ளது.

idli throat onam idly

இந்த விழாவில், கயிறு இழுக்கும் போட்டி, சாப்பாட்டு போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன.. எனவே, சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமானோர் இந்த நிகழ்வில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.. அந்தவகையில், சாப்பாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் கலந்து கொண்டார்.. 50 வயதான சுரேஷ், டிப்பர் லாரி டிரைவர் ஆவார்.

இட்லி ஆர்வம்: இந்த போட்டியில், குறிப்பிட்ட நேரத்தில் அதிக இட்லி சாப்பிடுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.. போட்டி ஆரம்பித்ததுமே அனைவருமே இட்லியை வேக வேகமாக சாப்பிட தொடங்கினார்கள்.. சுரேஷூம் இட்லியை ஆர்வத்துடன் சாப்பிட்டார்.. அப்போது திடீரென சுரேஷின் தொண்டையில் இட்லி சிக்கிக்கொண்டது.

இதில் மூச்சுச் திணறி, சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை வாளையாரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

பரிதாப சுரேஷ்: இது குறித்து சுள்ளிமடை வார்டு உறுப்பினர் மின்மினி சொல்லும்போது, ஒரேநேரத்தில் மூன்று இட்லிகளை ஒன்றாக விழுங்க முயன்றார் சுரேஷ்.. அப்போது இட்லி தொண்டையில் சிக்கியது. அந்த இட்லியை விழுங்க எவ்வளவோ முயற்சித்துள்ளார்.. அப்போதுதான் மூச்சுவிட முடியாமல் திணறிவிட்டார்.

உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.. பிறகு அங்கிருந்து வாளையாறில் உள்ள இன்னொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.. போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர்" என்றார்.

கொடுமை: பரோட்டா சாப்பிடுவது, இட்லி சாப்பிடுவது, பிரியாணி சாப்பிடுவது என போட்டிகள் நடத்தப்படுவது ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.. பணத்துக்கும் பரிசுக்கும் ஆசைப்பட்டு, மக்கள் இதில் பங்கேற்பதும் தொடர்ந்தபடியே உள்ளது.. இத்தகைய போட்டிகளை நடத்துவோர் மீதும், அதற்கு அனுமதி கொடுக்கும் அதிகாரிகள் மீதும் கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+