இலங்கை ஈஸ்டர் அட்டாக் போலவே பிளானிங்? கேரளா கிறிஸ்துவ நிகழ்வில் குண்டுவெடிப்பு.. நடந்தது என்ன?
திருவனந்தபுரம்: கேரளா எர்ணாகுளத்தில் கிறிஸ்துவ நிகழ்வில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல் இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு போலவே நிகழ்த்தப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் ஞாயிறு அன்று இலங்கையில் வரிசையாக குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. அங்கு அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இலங்கையில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இது என்று கூறப்படுகிறது.

இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர் பலியானார்கள். 450க்கும் அதிகமானோர் இதில் காயம் அடைந்தனர். இதில் இன்னும் பலர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்கள். கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச், மட்டக்களப்பு சர்ச், சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது.
இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இது தொடர்பாக அவர்கள் வீடியோவும் வெளியிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய முகமது யூசுப் இப்ராஹிம் என்பவரின் குடும்பம் விசாரிக்கப்பட்டது. டிபன் பாக்ஸ் குண்டு மூலம் இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டது.
கேரளா தாக்குதல்: கேரளாவில் கிறிஸ்துவ நிகழ்வில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல் இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு போலவே நிகழ்த்தப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கலமசேரியில் உள்ள மாநாட்டு மையத்தில் இன்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார்.
Jehovah's Witnesses என்ற கிறிஸ்துவ பிரிவை சேர்ந்தவர்கள் நடத்திய ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. குண்டுவெடிப்பு நடத்த இடத்தில் 2000 பேர் வரை கூடி இருந்தனர். வெடிகுண்டு படை, தடயவியல் குழு மற்றும் என்ஐஏ குழு ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. அதே நேரத்தில் கண்ணூர் ரயில் நிலையத்தில் இருந்து சந்தேகத்திற்கிடமான ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக கேரளா டிஜிபி ஷேக் தர்வேஷ் அளித்த பேட்டியில், கேரளாவில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில், வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு என்பது உறுதி ஆகி உள்ளது. 2 மணி நேர தீவிர விசாரணைக்கு பிறகு, 3 குண்டுகள் வெடித்தது, குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
என்.ஐ.ஏ, தேசிய பாதுகாப்பு படை மற்றும் கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளும் விசாரணை செய்து வருகிறது. இன்று காலை 9.40 மணியளவில் குண்டு வெடித்துள்ளது, என்று அவர் கூறியுள்ளார்.
கிறிஸ்தவப் பிரிவினர் அமைப்பு: Jehovah's Witnesses அல்லது யெகோவாவின் சாட்சிகள் ஒரு கிறிஸ்தவப் பிரிவினர் அமைப்பு ஆகும். ஆனால் இவர்கள் பரிசுத்த திரித்துவத்தில் (தந்தை, குமாரன் (இயேசு கிறிஸ்து) மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூன்று சம நபர்களில் நம்பிக்கையற்றவர்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவை "பரலோகத்தில் உள்ள கடவுளின் ராஜ்யத்தின் ராஜா" என்று நம்புகிறார்கள், ஆனால் இயேசுவை சர்வவல்லமையுள்ள கடவுள் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அவர்கள் பைபிளின் உரையை மட்டுமே முழுமையாக நம்ப கூடியவர்கள். Jehovah's Witnesses பிரிவை சேர்ந்தவர் கிறிஸ்மஸ் அல்லது ஈஸ்டர் கொண்டாடுவதில்லை, ஏனென்றால் இதுபோன்ற பண்டிகைகளை அவர்கள் நம்புவதில்லை.
-
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications