ஒரு நாள் வாழ்ந்தாலும் நான் நானாக வாழ வேண்டும்.. ராஜினாமா செய்த கண்ணன் கோபிநாதன் அதிரடி
திருவனந்தபுரம்: எனக்கு சுதந்திரம் வேண்டும் என்றும் நான் நானாக வாழ வேண்டும் என்றும் தாதர் நாகர் ஹவேலி ஆட்சியர் கண்ணன் கோபிநாதன் தெரிவித்தார்.
தாதர் - நாகர்ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருபவர் கண்ணன் கோபிநாதன். திருச்சூர் அருகே புத்தம்பள்ளியை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு கேரளாவையே உலுக்கிய வெள்ளத்தின் போது தான் ஆட்சியர் என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல் களத்தில் இறங்கி மீட்பு பணிகளை செய்தார்.
இவர் செங்கண்ணூரில் உள்ள நிவாரண முகாமில் பொருள்களை பிரித்து அனுப்பும் பணிகளில் 8 நாட்களாக இருந்தார். அடுத்த நாள் இவரை பிற அதிகாரிகள் அடையாளம் கண்டு கொண்டதால் இவர் ஆட்சியர் என்ற விவகாரம் தெரியவந்தது.

முதல்வரின் நிதி
இத்தகைய சேவை மனப்பான்மையை கண்டு மற்றவர்களும் ஆஹா இந்த மாதிரியான கலெக்டர் நமக்கு கிடைத்திருக்கலாமே என மனப்பால் குடித்தனர். மேலும் இவர் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி காசோலையை அளித்தார். தற்போது இவரே இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

குரலை இழந்துவிட்டேன்
இதுகுறித்து அவர் கூறியபோது, குரலற்றவர்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்றுதான் இந்த பணியில் சேர்ந்தேன். இப்போது என் சொந்தக் குரலையை இழந்துவிட்டேன்.

முயற்சி
சுதந்திரமாக செயல்பட முடியாததால் ராஜினாமா செய்தேன். இந்த சிஸ்டத்தில் இருந்து கொண்டே இதை மாற்ற வேண்டும் என்று சொல்லி வருகிறோம். நான் முயற்சி செய்து பார்த்துவிட்டேன்.

படிக்க சென்றேன்
ஆனால் இந்த சிஸ்டம் சரியாகும் என்று தெரியவில்லை. நான் மக்களுக்காக ஓரளவு செய்திருக்கிறேன். அது போதாது. இன்னும் செய்ய வேண்டும். யாராவது நான் செய்திருக்கிறேன் என கேட்டால் அதற்கு நான் விடுமுறை எடுத்துக் கொண்டு அமெரிக்காவில் உயர் படிப்பு படிக்க சென்றேன் என கூற முடியாது.

ராஜினாமா
அதற்கு பதிலாக வேலையை ராஜினாமா செய்வதே மேல். அரசு குடியிருப்பில் தங்கியிருக்கிறேன். தற்போது வேலையை ராஜினாமா செய்துவிட்டால் அடுத்து எங்கே போவது என தெரியவில்லை. ஒரு நாளாக இருந்தாலும் நான் நானாக வாழ வேண்டும் என்றார் கண்ணன் கோபிநாத். இவர் பிர்லா தொழில்நுட்ப கல்லூரியில் எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் படித்துள்ளார்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications