ஒரு நாள் வாழ்ந்தாலும் நான் நானாக வாழ வேண்டும்.. ராஜினாமா செய்த கண்ணன் கோபிநாதன் அதிரடி
திருவனந்தபுரம்: எனக்கு சுதந்திரம் வேண்டும் என்றும் நான் நானாக வாழ வேண்டும் என்றும் தாதர் நாகர் ஹவேலி ஆட்சியர் கண்ணன் கோபிநாதன் தெரிவித்தார்.
தாதர் - நாகர்ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருபவர் கண்ணன் கோபிநாதன். திருச்சூர் அருகே புத்தம்பள்ளியை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு கேரளாவையே உலுக்கிய வெள்ளத்தின் போது தான் ஆட்சியர் என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல் களத்தில் இறங்கி மீட்பு பணிகளை செய்தார்.
இவர் செங்கண்ணூரில் உள்ள நிவாரண முகாமில் பொருள்களை பிரித்து அனுப்பும் பணிகளில் 8 நாட்களாக இருந்தார். அடுத்த நாள் இவரை பிற அதிகாரிகள் அடையாளம் கண்டு கொண்டதால் இவர் ஆட்சியர் என்ற விவகாரம் தெரியவந்தது.

முதல்வரின் நிதி
இத்தகைய சேவை மனப்பான்மையை கண்டு மற்றவர்களும் ஆஹா இந்த மாதிரியான கலெக்டர் நமக்கு கிடைத்திருக்கலாமே என மனப்பால் குடித்தனர். மேலும் இவர் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி காசோலையை அளித்தார். தற்போது இவரே இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

குரலை இழந்துவிட்டேன்
இதுகுறித்து அவர் கூறியபோது, குரலற்றவர்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்றுதான் இந்த பணியில் சேர்ந்தேன். இப்போது என் சொந்தக் குரலையை இழந்துவிட்டேன்.

முயற்சி
சுதந்திரமாக செயல்பட முடியாததால் ராஜினாமா செய்தேன். இந்த சிஸ்டத்தில் இருந்து கொண்டே இதை மாற்ற வேண்டும் என்று சொல்லி வருகிறோம். நான் முயற்சி செய்து பார்த்துவிட்டேன்.

படிக்க சென்றேன்
ஆனால் இந்த சிஸ்டம் சரியாகும் என்று தெரியவில்லை. நான் மக்களுக்காக ஓரளவு செய்திருக்கிறேன். அது போதாது. இன்னும் செய்ய வேண்டும். யாராவது நான் செய்திருக்கிறேன் என கேட்டால் அதற்கு நான் விடுமுறை எடுத்துக் கொண்டு அமெரிக்காவில் உயர் படிப்பு படிக்க சென்றேன் என கூற முடியாது.

ராஜினாமா
அதற்கு பதிலாக வேலையை ராஜினாமா செய்வதே மேல். அரசு குடியிருப்பில் தங்கியிருக்கிறேன். தற்போது வேலையை ராஜினாமா செய்துவிட்டால் அடுத்து எங்கே போவது என தெரியவில்லை. ஒரு நாளாக இருந்தாலும் நான் நானாக வாழ வேண்டும் என்றார் கண்ணன் கோபிநாத். இவர் பிர்லா தொழில்நுட்ப கல்லூரியில் எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் படித்துள்ளார்.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications