ஒரு நாள் வாழ்ந்தாலும் நான் நானாக வாழ வேண்டும்.. ராஜினாமா செய்த கண்ணன் கோபிநாதன் அதிரடி
திருவனந்தபுரம்: எனக்கு சுதந்திரம் வேண்டும் என்றும் நான் நானாக வாழ வேண்டும் என்றும் தாதர் நாகர் ஹவேலி ஆட்சியர் கண்ணன் கோபிநாதன் தெரிவித்தார்.
தாதர் - நாகர்ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருபவர் கண்ணன் கோபிநாதன். திருச்சூர் அருகே புத்தம்பள்ளியை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு கேரளாவையே உலுக்கிய வெள்ளத்தின் போது தான் ஆட்சியர் என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல் களத்தில் இறங்கி மீட்பு பணிகளை செய்தார்.
இவர் செங்கண்ணூரில் உள்ள நிவாரண முகாமில் பொருள்களை பிரித்து அனுப்பும் பணிகளில் 8 நாட்களாக இருந்தார். அடுத்த நாள் இவரை பிற அதிகாரிகள் அடையாளம் கண்டு கொண்டதால் இவர் ஆட்சியர் என்ற விவகாரம் தெரியவந்தது.

முதல்வரின் நிதி
இத்தகைய சேவை மனப்பான்மையை கண்டு மற்றவர்களும் ஆஹா இந்த மாதிரியான கலெக்டர் நமக்கு கிடைத்திருக்கலாமே என மனப்பால் குடித்தனர். மேலும் இவர் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி காசோலையை அளித்தார். தற்போது இவரே இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

குரலை இழந்துவிட்டேன்
இதுகுறித்து அவர் கூறியபோது, குரலற்றவர்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்றுதான் இந்த பணியில் சேர்ந்தேன். இப்போது என் சொந்தக் குரலையை இழந்துவிட்டேன்.

முயற்சி
சுதந்திரமாக செயல்பட முடியாததால் ராஜினாமா செய்தேன். இந்த சிஸ்டத்தில் இருந்து கொண்டே இதை மாற்ற வேண்டும் என்று சொல்லி வருகிறோம். நான் முயற்சி செய்து பார்த்துவிட்டேன்.

படிக்க சென்றேன்
ஆனால் இந்த சிஸ்டம் சரியாகும் என்று தெரியவில்லை. நான் மக்களுக்காக ஓரளவு செய்திருக்கிறேன். அது போதாது. இன்னும் செய்ய வேண்டும். யாராவது நான் செய்திருக்கிறேன் என கேட்டால் அதற்கு நான் விடுமுறை எடுத்துக் கொண்டு அமெரிக்காவில் உயர் படிப்பு படிக்க சென்றேன் என கூற முடியாது.

ராஜினாமா
அதற்கு பதிலாக வேலையை ராஜினாமா செய்வதே மேல். அரசு குடியிருப்பில் தங்கியிருக்கிறேன். தற்போது வேலையை ராஜினாமா செய்துவிட்டால் அடுத்து எங்கே போவது என தெரியவில்லை. ஒரு நாளாக இருந்தாலும் நான் நானாக வாழ வேண்டும் என்றார் கண்ணன் கோபிநாத். இவர் பிர்லா தொழில்நுட்ப கல்லூரியில் எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் படித்துள்ளார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications