கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் சூழலில், அங்கு கடுமையான போட்டி நிலவுகிறது. இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் என இரண்டுமே இறங்கி வேலை செய்து வரும் சூழலில் போட்டி மிகக் கடுமையாக மாறியிருக்கிறது. இதற்கிடையே அங்கு ஒரு சில ஆயிரம் வாக்காளர்களே ஆட்சிக்கு வருவது யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளனர்.

கேரளாவில் கடந்த 10 ஆண்டுகளாகவே பினராயி விஜயன் முதல்வராக இருந்து வருகிறார். அங்கு இடதுசாரி அரசு நடந்து வருகிறது. இந்த முறை பினராயி அரசு மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் களமிறங்குகிறது.

Kerala Assembly Election

கேரளா தேர்தல்

இதனால் இரு தரப்புமே இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த முறை கேரளாவில் மிகக் கடுமையான போட்டி இருக்கும் என்றே தெரிகிறது. பாஜகவின் என்டிஏ கூட்டணியும் கூட கணிசமான வாக்கு வங்கியைப் பெற்றிருந்தாலும் கூட நேரடி போட்டி என்பது இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும் (LDF) காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் (UDF) இடையே தான் நடக்கிறது.

கடும் போட்டி

சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளும் கூட இதையே தான் காட்டுகிறது. முதலில் வெளியான மாட்ரிஸ்- ஐஏஎன்எஸ் (Matrize-IANS) சர்வேயில் இடதுசாரி கூட்டணி 61- 71 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 58 முதல் 69 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 2 இடங்களைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 தொகுதிகள்

மாத்ருபூமி சர்வேியலும் கிட்டத்தட்ட இதேதான் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் LDF சுமார் 66 இடங்களில் வெல்லும் எனக் கூறியுள்ளனர். அதாவது தற்போதுள்ள இடங்களுடன் ஒப்பிடுகையில் 32 முதல் 37 இடங்களை இழப்பார்களாம். அதேபோல எதிர்க்கட்சியான UDF சுமார் 62 இடங்களையும் வெல்லக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.. அதாவது காங்கிரஸ் கூட்டணி தற்போதுள்ள இடங்களை விடக் கூடுதலாக 20 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருக்கிறதாம். மொத்தம் 12 தொகுதிகளில் இழுபறி நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்பர்கள் கொஞ்சம் மாறினாலும் கூட இப்படி தான் பெரும்பாலான சர்வேக்களில் அங்கு கடும் போட்டி நிலவுவதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலையெழுத்தைத் தீர்மானிக்கும் வாக்குகள்

பிராந்தியம் வாரியாக பார்க்கும்போது மத்திய கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. தெற்கு கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணியின் கை ஓங்கியிருக்கிறது. அதேநேரம் வடக்கு கேரளாவில் தான் போட்டி மிகக் கடுமையாக இருக்கிறது. இரு தரப்பிற்குமே செல்வாக்கு சரிசமமாக இருப்பதால் அங்குள்ள மக்களே ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளனர். அதிலும் கடும் போட்டி நிலவும் 10 முதல் 12 தொகுதிகளில் உள்ள மக்கள் என்ன நினைக்கிறார்கள்.. யாருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்கிறார்கள் என்பதே முக்கியமாக இருக்கும். அந்த சில ஆயிரம் வாக்குகளே கேரளாவில் தலையெழுத்தைத் தீர்மானிக்கும்.

கேரளாவைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 140 தொகுதிகள் உள்ளன. அதில் 71 இடங்களில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும். கடந்த தேர்தலில் இடதுசாரி கூட்டணி 99 இடங்களில் வென்றது. குறிப்பாக சிபிஎம் 62ஐ கைப்பற்றியது. காங்கிரஸ் கூட்டணி அந்த தேர்தலில் 41ல் மட்டுமே வென்றது. குறிப்பாகக் காங்கிரஸ் வெறும் 22 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+