கேரளா குண்டுவெடிப்பு.. மக்களின் பாலஸ்தீன் ஆதரவை திசை திருப்ப சதி -பயங்கரவாதம் என சொல்லும் ஆளுங்கட்சி
திருவனந்தபுரம்: கொச்சி அருகே பிரார்த்தனை கூடத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அம்மாநில ஆளுங்கட்சியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் இந்த விவகாரத்தில் புதிய கோணத்தை முன்வைத்து இருக்கிறார்.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்து உள்ள களமச்சேரி. கொச்சியில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் இப்பகுதியில் உள்ள சாம்ரா என்ற பிரார்த்தனைக் கூடத்தில் இன்று காலை 10 மணி அளவில் யெகோவாவின் சாட்சிகள் என்ற பிரார்த்தனை நடைபெற்றது. இதில் சுமார் 2,200 பேர் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு உள்ளனர். அனைவரும் கண்களை மூடி இறை வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

இதன் காரணமாக அந்த பிரார்த்தனைக் கூடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பிரார்த்தனையில் பங்கேற்ற மக்கள் பதறியடித்துக் கொண்டு அங்கும் இங்குமாக சிதறி ஒடினர். இந்த விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 10 பேருக்கு பயங்கர தீக்காயங்கள் ஏற்பட்டு உள்ளதாகவும், அதில் 2 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. குண்டு வெடிப்பு மற்றும் கூட்ட நெரிசலால் 36 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்து உள்ள கேரளாவில் ஆளுங்கட்சியாக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன், "களமசேரி பிரார்த்தனைக் கூடத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு என்பது பாலஸ்தீன் பிரச்சனையை திசை திருப்புவதற்காக நடத்தப்பட்டதாக இருக்கும். கேரள மக்கள் தாங்களாக முன் வந்து போரால் பாதிக்கப்பட்டு உள்ள பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். எனவே மக்கள் கவனத்தை திசை திருப்ப இது நட்த்தப்பட்டு இருக்கலாம். இந்த தாக்குதலை கண்டிக்கிறேன். அரசியல் ரீதியாக பார்த்தால் இதுபோன்ற சம்பவங்கள் பயங்கரவாத நடவடிக்கையின் ஒரு அங்கம்." என்றார்.
இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளதாவது, "துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்து இருக்கிறது. கூடுதல் தகவல்களை திரட்டி வருகிறது. டிஜிபி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று இருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும். முழுமையான விசாரணைக்கு பிறகே கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும்." என்றார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications