கேரளா குண்டுவெடிப்பு.. மக்களின் பாலஸ்தீன் ஆதரவை திசை திருப்ப சதி -பயங்கரவாதம் என சொல்லும் ஆளுங்கட்சி
திருவனந்தபுரம்: கொச்சி அருகே பிரார்த்தனை கூடத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அம்மாநில ஆளுங்கட்சியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் இந்த விவகாரத்தில் புதிய கோணத்தை முன்வைத்து இருக்கிறார்.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்து உள்ள களமச்சேரி. கொச்சியில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் இப்பகுதியில் உள்ள சாம்ரா என்ற பிரார்த்தனைக் கூடத்தில் இன்று காலை 10 மணி அளவில் யெகோவாவின் சாட்சிகள் என்ற பிரார்த்தனை நடைபெற்றது. இதில் சுமார் 2,200 பேர் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு உள்ளனர். அனைவரும் கண்களை மூடி இறை வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

இதன் காரணமாக அந்த பிரார்த்தனைக் கூடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பிரார்த்தனையில் பங்கேற்ற மக்கள் பதறியடித்துக் கொண்டு அங்கும் இங்குமாக சிதறி ஒடினர். இந்த விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 10 பேருக்கு பயங்கர தீக்காயங்கள் ஏற்பட்டு உள்ளதாகவும், அதில் 2 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. குண்டு வெடிப்பு மற்றும் கூட்ட நெரிசலால் 36 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்து உள்ள கேரளாவில் ஆளுங்கட்சியாக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன், "களமசேரி பிரார்த்தனைக் கூடத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு என்பது பாலஸ்தீன் பிரச்சனையை திசை திருப்புவதற்காக நடத்தப்பட்டதாக இருக்கும். கேரள மக்கள் தாங்களாக முன் வந்து போரால் பாதிக்கப்பட்டு உள்ள பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். எனவே மக்கள் கவனத்தை திசை திருப்ப இது நட்த்தப்பட்டு இருக்கலாம். இந்த தாக்குதலை கண்டிக்கிறேன். அரசியல் ரீதியாக பார்த்தால் இதுபோன்ற சம்பவங்கள் பயங்கரவாத நடவடிக்கையின் ஒரு அங்கம்." என்றார்.
இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளதாவது, "துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்து இருக்கிறது. கூடுதல் தகவல்களை திரட்டி வருகிறது. டிஜிபி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று இருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும். முழுமையான விசாரணைக்கு பிறகே கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும்." என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications