குடியுரிமை சட்டத்திருத்தம்.. திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் சத்தியாகிரகம்
Recommended Video
திருவனந்தபுரம்: குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் சத்தியாகிரகம் மேற்கொண்டு வருகிறார்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2015-ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை இந்தியாவில் குடியேறிய அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் மசோதா அண்மையில் இரு அவைகளிலும் நிறைவேறியது.
இந்த நிலையில் இந்த மசோதாவில் இடம்பெற்ற 6 மதத்தினருக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில் முஸ்லிம்களின் பெயர் இல்லை. இதுவும் இந்த மசோதாவை எதிர்க்க முக்கிய காரணமாகும்.

போர்க்களம்
மசோதாவை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது. அது போல் தெற்கு டெல்லியிலும் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டம் போர்க்களமாக மாறியது.

அழைப்பு
இந்த நிலையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் சத்தியாகிரக போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி தியாகிகள் நினைவுத்தூண் அருகே போராட்டம் நடைபெற்று வருகிறது.

குடியுரிமை சட்டம்
பினராயி விஜயன் பங்கேற்றுள்ளார். காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்டவை போராட்டத்தில் பங்கேற்றன. இந்த போராட்டத்தில் பினராயி விஜயன் பேசுகையில் கேரளாவில் மதசார்பற்ற மற்றும் ஜனநாயக ரீதியிலாக அனைவரும் ஒன்றிணைந்து குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றார்.
|
ஹேஷ்டேக்
நாம் எதிர்ப்போம், நான் எதிர்த்துதான் ஆக வேண்டும் என்ற இரு கொள்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. #WeWillResist என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications