கேரள சட்டசபையில் ஒலித்த தமிழ்... தாய்மொழியில் உறுதிமொழி கூறி பதவியேற்ற தேவிகுளம் சிபிஎம் எம்எல்ஏ
திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத் தேர்தலில் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் A.ராஜா, தனது தாய்மொழியான தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மே 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. அதில் கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஆளும் கட்சியே ஆட்சியைத் தக்க வைத்தது.
கேரளாவில் மொத்தம் இருக்கும் 140 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி 99 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது.

கேரள தேர்தல்
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 41 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த முறை ஒரு இடத்தில் மட்டும் வென்ற பாஜக இந்த முறை போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகி 18 நாட்களுக்குப் பிறகு, கேரள முதல்வராக பினராயி விஜயன் கடந்த 20ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றார்.

பதவியேற்பு விழா
கொரோனா பரவல் காரணமாக எளிமையாக நடந்த இந்த விழாவில் 20 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து இடைக்கால சபாநாயகராக பிடிஏ ரகீம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்குக் கடந்த வெள்ளிக்கிழமை ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், 15ஆவது கேரள சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

தமிழில் பதவியேற்ற தேவிகுளம் எம்எல்ஏ
இடைக்கால சபாநாயகர் ரகீம் இன்று அனைத்து எம்எல்ஏக்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அப்போது, கேரள சட்டமன்றத் தேர்தலில் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் A.ராஜா, இன்று தனது தாய்மொழியான தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றுக் கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அவரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சு வெங்கடேசன் எம்பி வாழ்த்து
இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் தனது பேஸ்புக் பக்கத்தில், "சேரநாட்டில் செந்தமிழ்! கேரள சட்டமன்றத் தேர்தலில் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தோழர் வழக்கறிஞர் A.ராஜா தனது தாய்மொழியான தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றார் . அவருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!" எனப் பதிவிட்டுள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications