அடிபொலி சாரே.. ஆன்லைனில் மதுபான புக்கிங்.. கூட்டத்தை தவிர்க்க, கேரளா அசத்தல்
திருவனந்தபுரம்: மதுக் கடைகளில் கூட்டம் சேர்வதை தடுப்பதற்காக, ஆன்லைன் மூலமாக டோக்கன் வழங்க கூடிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, மது விற்பனையைத் துவங்க உள்ளது கேரள அரசு.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், மதுக் கடைகளின் முன்பாக நின்ற நீண்ட கூட்டத்தை பார்த்து விட்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது பினராயி விஜயன் அரசு.
நேற்று, திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில், மீண்டும் மதுக்கடைகளை திறப்பது என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது. நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐசக் இதை நிருபர்களிடம் உறுதி செய்தார்.

வரி அதிகரிப்பு
அதேநேரம் செலவீனங்கள் அதிகரிப்பு காரணமாக மதுபானங்களின் விலையை உயர்த்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 35 சதவீதம் வரை மதுபானங்களின் விலை உயரப் போகிறது. மதுபான விலை உயர்வும் மூலமாக கூடுதலாக 2,000 கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மதுபான விலை மாற்றம்
பகார்டி ரம் விலை உயர்வு ரூ .150 அளவுக்கு இருக்கும் (புதிய விலை - ரூ .1440, பழைய விலை ரூ .1290), சிக்னேச்சர் விஸ்கி ரூ .140 ஆக இருக்கும் (புதிய விலை ரூ .1410, பழைய விலை ரூ .1270), மேஜிக் மொமண்ட்ஸ் வோட்கா ரூ .100 (புதிய விலை ரூ. 1010, பழைய விலை ரூ .910), மேன்ஷன் ஹவுஸ் பிராந்தி ரூ .90 (புதிய விலை ரூ .910, பழைய விலை ரூ .820) மற்றும் ஜவான் ரம் (புதிய விலை ரூ .580, பழைய ரூ .500).

301 மதுபான கடைகள்
அரசு நடத்தக்கூடிய 301 மதுபான கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ள போதிலும் அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதேநேரம் மதுபான கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்கு ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்து டோக்கன் பெற்று கொள்ள வேண்டுமாம்.

டோக்கன்
டோக்கன் பெற்ற பிறகு, குறிப்பிட்ட நேரத்திற்கு மதுபான கடைக்கு சென்று மது வாங்கி கொள்ளலாம். இதனால் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் குடிமகன்களுக்கு ஏற்படாது. கூட்டம் அதிகமாக சேருவதால், ஏற்படும் நோய் தொற்றுக்கான வாய்ப்பு குறையும். எனவே கேரள அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தமிழக அரசு இதுபோன்ற நடைமுறையை பின்பற்றலாமே.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications