தாய், தந்தைக்கு பதில்.. 'பெற்றோர்'! திருநங்கை தம்பதி குழந்தையின் பிறப்பு சான்றிதழில் மாற்றம்!
திருவனந்தபுரம்: திருநங்கை தம்பதியினரின் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில், பெற்றோர்களை 'தந்தை', 'தாய் என்பதற்குப் பதிலாக 'பெற்றோர்' என குறிப்பிட்டால் போதும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
மாற்றுபாலினத்தவர்கள் சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கு பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஒரு குடும்பமாக வாழ விரும்பினால், யார் கணவன்? யார் மனைவி என்கிற கேள்வி எழுகிறது. குழந்தையை தத்தெடுத்து வளர்த்தாலும் தந்தை யார்? தாய் யார் என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. பாலினங்களில் இரண்டு மட்டுமே இல்லை, அதை தாண்டி பல பாலினங்கள் இருக்கின்றன, அவர்களுக்கான அடையாளத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக மாற்றுப்பாலினத்தவர்கள் சந்திக்காத இன்னல்களே இல்லை என்று சொல்லலாம்.

இப்படி இருக்கையில்தான் இவர்களை அங்கீகரிக்கும் விதமாக கேரள உயர்நீதிமன்றம் முக்கியமான உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
அதாவது கேரளாவை சேர்ந்த ஜியா பாவல், ஜஹாத் திருநங்கை தம்பதியினருக்கு கடந்த 2023ம் ஆண்டு குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழில் தாய் ஜஹாத் என்றும் தந்தை ஜியா பாவல் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை எதிர்த்த பெற்றோர்கள், ஜஹாத் தன்னை ஆணாக பார்க்க வேண்டும் என்று தொடர்ந்து உரிமை கோரி வருகிறார்.
இப்படி இருக்கையில், தன்னை தாய் என்று குறிப்பிடப்பட்டிருப்பது தவறு என்றும், தங்களை வெறும் பெற்றோர் என்று மட்டும் குறிப்பிட்டால் போதுமானது என்றும் கூறி வந்தார்.
ஆனால், மருத்துவமனை அதிகாரிகள் இதனை ஏற்கவில்லை. இந்நிலையில் திருநங்கை பெற்றோர் கேரள உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தனர். வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம், இன்று இந்த வழக்கின் மீது உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதன்படி, குழந்தைக்கு வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழில் வெறும், 'பெற்றோர்' என்று குறிப்பிட்டால் போதும். தாய், தந்தை என குறிப்பிட வேண்டியதில்லை என்று கூறியிருக்கிறது.
வழக்கின் பின்னணி:
ஜஹாத் என்பவர் பிறப்பால் பெண். ஆனால், பருவ வயதில்தான், தான் ஒரு மாற்று பாலினத்தை சேர்ந்தவர் என்பதை உணர்ந்திருக்கிறார். அதேபோல ஜியா பாவல் பிறப்பால் ஆண். ஆனால், அவரும் வளரிளம் பருவத்தில் தான் திருநங்கை என்பதை உணர்ந்திருக்கிறார். இதனையடுத்து இருவரும் அப்படியே வளர்ந்திருக்கின்றனர். இவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்களுக்கு 2023ம் ஆண்டு குழந்தை பிறந்தது.
திருநங்கை தம்பதிகளுக்கு குழந்தை பிறந்தது நாட்டிலேயே முதல்முறை இதுதான். பிறந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழில் மாற்றம் கோரிதான் அவர்கள் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். இதனையடுத்து, இன்று இந்த வழக்கில் உத்தரவு வெளியாகியுள்ளது. இந்த உத்தரவு திருநங்கை தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications