தாய், தந்தைக்கு பதில்.. 'பெற்றோர்'! திருநங்கை தம்பதி குழந்தையின் பிறப்பு சான்றிதழில் மாற்றம்!
திருவனந்தபுரம்: திருநங்கை தம்பதியினரின் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில், பெற்றோர்களை 'தந்தை', 'தாய் என்பதற்குப் பதிலாக 'பெற்றோர்' என குறிப்பிட்டால் போதும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
மாற்றுபாலினத்தவர்கள் சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கு பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஒரு குடும்பமாக வாழ விரும்பினால், யார் கணவன்? யார் மனைவி என்கிற கேள்வி எழுகிறது. குழந்தையை தத்தெடுத்து வளர்த்தாலும் தந்தை யார்? தாய் யார் என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. பாலினங்களில் இரண்டு மட்டுமே இல்லை, அதை தாண்டி பல பாலினங்கள் இருக்கின்றன, அவர்களுக்கான அடையாளத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக மாற்றுப்பாலினத்தவர்கள் சந்திக்காத இன்னல்களே இல்லை என்று சொல்லலாம்.

இப்படி இருக்கையில்தான் இவர்களை அங்கீகரிக்கும் விதமாக கேரள உயர்நீதிமன்றம் முக்கியமான உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
அதாவது கேரளாவை சேர்ந்த ஜியா பாவல், ஜஹாத் திருநங்கை தம்பதியினருக்கு கடந்த 2023ம் ஆண்டு குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழில் தாய் ஜஹாத் என்றும் தந்தை ஜியா பாவல் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை எதிர்த்த பெற்றோர்கள், ஜஹாத் தன்னை ஆணாக பார்க்க வேண்டும் என்று தொடர்ந்து உரிமை கோரி வருகிறார்.
இப்படி இருக்கையில், தன்னை தாய் என்று குறிப்பிடப்பட்டிருப்பது தவறு என்றும், தங்களை வெறும் பெற்றோர் என்று மட்டும் குறிப்பிட்டால் போதுமானது என்றும் கூறி வந்தார்.
ஆனால், மருத்துவமனை அதிகாரிகள் இதனை ஏற்கவில்லை. இந்நிலையில் திருநங்கை பெற்றோர் கேரள உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தனர். வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம், இன்று இந்த வழக்கின் மீது உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதன்படி, குழந்தைக்கு வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழில் வெறும், 'பெற்றோர்' என்று குறிப்பிட்டால் போதும். தாய், தந்தை என குறிப்பிட வேண்டியதில்லை என்று கூறியிருக்கிறது.
வழக்கின் பின்னணி:
ஜஹாத் என்பவர் பிறப்பால் பெண். ஆனால், பருவ வயதில்தான், தான் ஒரு மாற்று பாலினத்தை சேர்ந்தவர் என்பதை உணர்ந்திருக்கிறார். அதேபோல ஜியா பாவல் பிறப்பால் ஆண். ஆனால், அவரும் வளரிளம் பருவத்தில் தான் திருநங்கை என்பதை உணர்ந்திருக்கிறார். இதனையடுத்து இருவரும் அப்படியே வளர்ந்திருக்கின்றனர். இவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்களுக்கு 2023ம் ஆண்டு குழந்தை பிறந்தது.
திருநங்கை தம்பதிகளுக்கு குழந்தை பிறந்தது நாட்டிலேயே முதல்முறை இதுதான். பிறந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழில் மாற்றம் கோரிதான் அவர்கள் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். இதனையடுத்து, இன்று இந்த வழக்கில் உத்தரவு வெளியாகியுள்ளது. இந்த உத்தரவு திருநங்கை தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications