Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிம்மதியே போயிடுச்சி.. தலைமறைவாக இருக்கேன்.. கேரள லாட்டரியில் ரூ.25 கோடி கிடைத்தவர் கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள லாட்டரியில் 25 கோடி ரூபாய் பரிசு பெற்ற நபர்.. தன்னிடம் பலரும் பணம் கேட்டு தொல்லை பண்ணுவதாக தெரிவித்து உள்ளார். இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டுவிட்டது என்றும் மனஉளைச்சலில் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

திருவோணம் பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த சில நாட்களுக்கு முன் கேரள அரசு சார்பில் நடத்தப்பட்டது. ஆட்டோ டிரைவர் அனூப் என்பவர் இதில் முதல் பரிசு பெற்றார்.

திருவனந்தபுரத்தை சேர்ந்த இவர் வென்றதுதான், இதுவரை லாட்டரியில் கேரளாவில் வெல்லப்பட்ட அதிக தொகை ஆகும். இந்த லாட்டரியில் இவருக்கு 25 கோடி ரூபாய் கிடைத்தது.

வரி

வரி

கடுமையான வறுமையில் இருந்த அனூப் வெளிநாடு செல்வதாக இருந்தார். அதேபோல் லோன் கேட்டும் விண்ணப்பம் செய்து இருந்தார். ஆனால் 25 கோடி ரூபாய் பணம் கிடைத்ததால் அந்த திட்டங்களை கைவிட்டார்.தன் மகன் உண்டியலில் சேர்த்து வைத்து இருந்த பணத்தை சேர்த்துதான் இவர் லாட்டரி சீட்டே வாங்கி இருக்கிறார். ஆனால் இவருக்கு முழுமையாக தொகை கையில் வராது.

வங்கி

வங்கி

15.75 கோடி ரூபாய் வங்கிக் கணக்கில் இவருக்கு கொடுக்கப்படும். மீதம் உள்ளதில் 8 கோடி ரூபாய் அளவிற்கு வரி பிடித்தம் செய்யப்படும். 10 சதவிகிதம் லீடருக்கு கமிஷனாக வழங்கப்படும். இந்த நிலையில்தான் தன்னிடம் பலரும் பணம் கேட்டு தொல்லை பண்ணுவதாக தெரிவித்து உள்ளார். இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டுவிட்டது என்றும் மனஉளைச்சலில் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக புலம்பலோடு அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.

வீடியோ

வீடியோ

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எனக்கு லாட்டரியில் பணம் கிடைத்தது எல்லாம் சந்தோசம்தான். ஆனால் என்னை உறவினர்கள் பணம் கேட்டு தொல்லை செய்கிறார்கள். என்னுடைய சந்தோசம் எல்லாம் போய்விட்டது. நான் இப்போது தலைமறைவாக இருக்கிறேன். காசு கொடுங்கள் உதவி செய்யுங்கள் என்று என்னிடம் கேட்டு நிறைய பேர் வீட்டிற்கு வருகிறார்கள். நான் வீட்டிலேயே இருக்க முடியாத நிலை உள்ளது.

சகோதரி வீடு

சகோதரி வீடு

இப்போது என் சகோதரி வீட்டில்தான் இருக்கிறேன்.எங்கே சென்றாலும் அங்கேயும் வந்து என்னிடம் பணம் கேட்கிறார்கள். எனக்கே இன்னும் பணம் வரவில்லை. எனக்கு நிம்மதியே இல்லை. பணம் இல்லை என்று சொன்னால் கூட நான் திமிராக பேசுவது போல நினைத்துக்கொள்கிறார்கள். ஏன் இவ்வளவு லாட்டரி கிடைத்தது என்றும் வருந்தும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது, என்று புலம்பலாக தெரிவித்து உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+