நிம்மதியே போயிடுச்சி.. தலைமறைவாக இருக்கேன்.. கேரள லாட்டரியில் ரூ.25 கோடி கிடைத்தவர் கண்ணீர்
திருவனந்தபுரம்: கேரள லாட்டரியில் 25 கோடி ரூபாய் பரிசு பெற்ற நபர்.. தன்னிடம் பலரும் பணம் கேட்டு தொல்லை பண்ணுவதாக தெரிவித்து உள்ளார். இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டுவிட்டது என்றும் மனஉளைச்சலில் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
திருவோணம் பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த சில நாட்களுக்கு முன் கேரள அரசு சார்பில் நடத்தப்பட்டது. ஆட்டோ டிரைவர் அனூப் என்பவர் இதில் முதல் பரிசு பெற்றார்.
திருவனந்தபுரத்தை சேர்ந்த இவர் வென்றதுதான், இதுவரை லாட்டரியில் கேரளாவில் வெல்லப்பட்ட அதிக தொகை ஆகும். இந்த லாட்டரியில் இவருக்கு 25 கோடி ரூபாய் கிடைத்தது.

வரி
கடுமையான வறுமையில் இருந்த அனூப் வெளிநாடு செல்வதாக இருந்தார். அதேபோல் லோன் கேட்டும் விண்ணப்பம் செய்து இருந்தார். ஆனால் 25 கோடி ரூபாய் பணம் கிடைத்ததால் அந்த திட்டங்களை கைவிட்டார்.தன் மகன் உண்டியலில் சேர்த்து வைத்து இருந்த பணத்தை சேர்த்துதான் இவர் லாட்டரி சீட்டே வாங்கி இருக்கிறார். ஆனால் இவருக்கு முழுமையாக தொகை கையில் வராது.

வங்கி
15.75 கோடி ரூபாய் வங்கிக் கணக்கில் இவருக்கு கொடுக்கப்படும். மீதம் உள்ளதில் 8 கோடி ரூபாய் அளவிற்கு வரி பிடித்தம் செய்யப்படும். 10 சதவிகிதம் லீடருக்கு கமிஷனாக வழங்கப்படும். இந்த நிலையில்தான் தன்னிடம் பலரும் பணம் கேட்டு தொல்லை பண்ணுவதாக தெரிவித்து உள்ளார். இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டுவிட்டது என்றும் மனஉளைச்சலில் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக புலம்பலோடு அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.

வீடியோ
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எனக்கு லாட்டரியில் பணம் கிடைத்தது எல்லாம் சந்தோசம்தான். ஆனால் என்னை உறவினர்கள் பணம் கேட்டு தொல்லை செய்கிறார்கள். என்னுடைய சந்தோசம் எல்லாம் போய்விட்டது. நான் இப்போது தலைமறைவாக இருக்கிறேன். காசு கொடுங்கள் உதவி செய்யுங்கள் என்று என்னிடம் கேட்டு நிறைய பேர் வீட்டிற்கு வருகிறார்கள். நான் வீட்டிலேயே இருக்க முடியாத நிலை உள்ளது.

சகோதரி வீடு
இப்போது என் சகோதரி வீட்டில்தான் இருக்கிறேன்.எங்கே சென்றாலும் அங்கேயும் வந்து என்னிடம் பணம் கேட்கிறார்கள். எனக்கே இன்னும் பணம் வரவில்லை. எனக்கு நிம்மதியே இல்லை. பணம் இல்லை என்று சொன்னால் கூட நான் திமிராக பேசுவது போல நினைத்துக்கொள்கிறார்கள். ஏன் இவ்வளவு லாட்டரி கிடைத்தது என்றும் வருந்தும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது, என்று புலம்பலாக தெரிவித்து உள்ளார்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications